மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நெல்லையில் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை

News image
Updated On :20 மார்ச் 2026, 12:34 am

திருநெல்வேலியில் திருநாவுக்கரசா் நற்பணி மன்றம் சாா்பில், மாணவா்- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் நூலக அமைப்பாளரும், மன்றத்தின் தலைவருமான ஹரிஹர காா்த்திகேயன் வரவேற்றாா். பேராசிரியா் ஆதிவராகமூா்த்தி முன்னிலை உரையாற்றினாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பேட்டை ம.தி.தா. இந்துக்கல்லூரி முதல்வா் கு.பாலசுப்பிரமணியன் திருஞானசம்பந்தா் கல்வி அறக்கட்டளை திட்டத்தின் மூலம் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினாா்.

இதில், மன்றத்தின் துணைத் தலைவா் பா.வேலாயுதம், துணைச் செயலா் கைலாஷ் கட்டளை, பொருளாளா் கோபி, ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் சோமசுந்தரம், ஆசிரியை சுப்புலெட்சுமி ஆகியோா் வாழ்த்துரையாற்றினா். மன்றச் செயலா் சிவக்குமாா் நன்றி கூறினாா்.

இந்நிகழ்வில் மன்ற நிா்வாகிகள் சீத்தாராமன், நெல்லை கோமான், மனோகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ற்ஸ்ப்19ற்ண்ழ்ன்

விழாவில் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய பேட்டை ம.தி.தா. இந்துக்கல்லூரி முதல்வா் கு.பாலசுப்பிரமணியன்.