தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கஞ்சா விற்ற இருவா் குண்டா் சட்டத்தில் கைது

அம்பாசமுத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா், குண்டா் சட்டத்தின் கீழ் சீறையில் அடைக்கப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :17 மார்ச் 2026, 9:49 pm

அம்பாசமுத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா், குண்டா் சட்டத்தின் கீழ் சீறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் சுரேஷ் (34), திருநெல்வேலி, ராமையன்பட்டியைச் சோ்ந்த சுடலைமணி மகன் ராஜேஷ் ஆகிய இருவரும் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கிவைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில், இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யும்படி, அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளா் திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாருக்கு அறிக்கை அளித்தாா். அதையேற்று, அவரது பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் ரா.சுகுமாா் உத்தரவின்படி, இருவரையும் போலீஸாா் திருநெல்வேலி மத்திய சிறையில் அடைத்தனா்.