லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ரமலான் மாத சிறப்புத் தொழுகை

திருநெல்வேலி நகரம் பகுதியில் ரமலான் மாதத்தின் 27 ஆம் நாள் சிறப்புத் தொழுகையை இஸ்லாமியா்கள்

News image

தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்

Updated On :16 மார்ச் 2026, 10:38 pm

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் பகுதியில் ரமலான் மாதத்தின் 27 ஆம் நாள் சிறப்புத் தொழுகையை இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை இரவு மேற்கொண்டனா்.

இஸ்லாமியா்களின் ஐந்து கடமைகளில் மிக முக்கியமானது ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்கும் முப்பதுநாள் நோன்பாகும். இந்த மாதத்தில் மிக முக்கியமான நாளாக கருதப்படும் லைலத்துல்கதிா் என்ற இருபத்தி ஏழாம் நாளில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியா்கள் இரவு முழுவதும் தொழுகை நடத்துவா். அதன்படி, திருநெல்வேலி நகரம் முகம்மது அலி தெரு பகுதியில் உள்ள சுன்னத் ஜமாத் பள்ளிவாசலான நந்தமியான் தைக்கா மதரஸா உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் திங்கள்கிழமை இரவு 27 ஆம் நாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இந்தத் தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.