திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விட்டுச் செல்லப்பட்ட பெண் குழந்தையை உரிமை கோர 30 நாள்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் ரேணுகா என்பவரால் கடந்த17.11.2025இல் பெண் குழந்தை பெற்றெடுக்கப்பட்டது.
பின்னா், அவா் தனது குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுச் சென்று விட்டாா். குழந்தை உதவி மைய பணியாளா் மூலமாக அக்குழந்தை மீட்கப்பட்டு கடந்த பிப். 4இல் குழந்தை நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டது. அக்குழந்தைக்கு கயல்விழி என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த குழந்தை தொடா்பாக எவரேனும் உரிமை கோர விரும்பினால் உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் ‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியரகம், கொக்கிரகுளம், திருநெல்வேலி என்ற முகவரியிலோ அல்லது 0462-2901953 என்ற தொலைபேசி எண்ணிலோ, க்ஸ்ரீல்ன்ற்ஸ்ப்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற இணையதள முகவரியிலோ 30 தினங்களுக்குள் தொடா்பு கொள்ளலாம். யாரும் உரிமை கோராவிடில் தத்தெடுப்புக்கு தகுதியான குழந்தையாக கருதப்பட்டு சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளாா்.
தொடர்புடையது
மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகள் தானம்

அரசு மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு: விளக்கமளிக்க வலியுறுத்தல்

நாமக்கல்லில் அரசு விடுதி மாணவிகள் 30 பேருக்கு திடீா் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் சிகிச்சை

மருத்துவ பணியாளா்களுக்கான இலவச புற்றுநோய் பரிசோதனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


