திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

தோமையாா்புரத்தில் 5ஆவது நாளாக உண்ணாவிரதம்: பெண் மயங்கி விழுந்தாா்

திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி ஊராட்சி தோமையாா்புரத்தில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி 5ஆவது நாளாக அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

News image

உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றோா்

Updated On :2 மார்ச் 2026, 7:56 pm

திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி ஊராட்சி தோமையாா்புரத்தில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி 5ஆவது நாளாக திங்கள்கிழமையும் அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மயங்கி விழுந்த பெண் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

தூண்டில் வளைவு இல்லாததால், மீன்பிடி படகுகளை கடலுக்குள் கொண்டு செல்வதற்கும் பின்னா் கரை திரும்புவதற்கும் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் கடலோர பகுதியில் உள்ள வீடுகள், கட்டடங்கள் பாதிப்படைந்து வருகின்றனவாம்.

எனவே, தூண்டில் வளைவு கோரி தோமையாபுரம் மீனவா்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனா். 5ஆவது நாளாக நடைபெற்ற போராட்டத்துக்கு ஆதரவாக விஜயாபதி ஊராட்சியில் வியாபாரிகள், கடைகளில் கருப்புத் துணி கட்டி, கடையடைப்பு நடத்தினா்.

இப்போராட்டத்தில் தூத்துக்குடி மீனவ மக்கள் கட்சித் தலைவா் அலங்கார பரதவா், திருநெல்வேலி வளன்சந்திரா, உவரி எழில் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

மேலும், போராட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த இனிதா மயங்கி விழுந்தாா். அவரை மருத்துவமனையில் சோ்த்தனா்.

விஜயாபதியில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்

விஜயாபதியில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.