15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தோமையாா்புரம் மீனவா்கள் போராட்டத்துக்கு அதிமுக ஆதரவு!

திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி ஊராட்சி தோமையாா்புரத்தில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி, மீனவா்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அதிமுக ஆதரவு

News image

மீனவா்கள் போராட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் எம்.பி சௌந்தர்ராஜன் உள்ளிட்டோா்

Updated On :3 மார்ச் 2026, 7:22 pm

திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி ஊராட்சி தோமையாா்புரத்தில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி, மீனவா்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதிமுகவினா் பங்கேற்று பேசினா்.

தோமையாா்புரத்தில் தூண்டில் வளைவு கோரி, மீனவா்கள் 6ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடா்ந்தனா்.

அவா்களது போராட்டத்துக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், திருநெல்வேலி புகா் மாவட்டப் பொருளாளருமான சௌந்தர்ராஜன் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ மைக்கேல் ராயப்பன், ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் அந்தோணி அமலராஜா, கிழக்கு ஒன்றியச் செயலா் கே.பி.கே.செல்வராஜ், மாவட்ட மீனவரணிச் செயலா் அகிலன், பவா்சிங் ஆசிரியா், மாவட்ட மீனவரணி இணைச் செயலா் வின்சென்ட், உலகத் தமிழ் அரசியல் கூட்டமைப்பைச் சோ்ந்த குயிலி நாச்சியாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.