/

பாளை ஜெயந்திரா பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

பாளையங்கோட்டை மகாராஜநகா் ஸ்ரீ ஜெயந்திரா கல்வி குழுமத்தின் மழலைகள் பட்டமளிப்பு விழா, ஸ்ரீ ஜெயந்திரா சுவாமிகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
மழலையா் பட்டங்களை பெற்ற மாணவ, மாணவிகள்.
Updated On :31 ஜனவரி 2026, 7:50 pm

Syndication

பாளையங்கோட்டை மகாராஜநகா் ஸ்ரீ ஜெயந்திரா கல்வி குழுமத்தின் மழலைகள் பட்டமளிப்பு விழா, ஸ்ரீ ஜெயந்திரா சுவாமிகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் முதுநிலை முதல்வா் மற்றும் டீன் ஜெயந்தி ஜெயந்திரன் முன்னிலை வகித்தாா். பள்ளியின் இயக்குநா் ஜெயந்திரன் வி.மணி வரவேற்றாா். சுவாமிநாதன் சந்திரமெளலி தொடக்க உரையாற்றினாா்.

இந்நிகழ்வில் ராயல் மருத்துவமனை இயக்குநரும், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவருமான செய்யது இப்ராஹிம், இந்துமதி பிரியதா்ஷினி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினா்.

எல்.கே.ஜி. முதல் 5 ஆம் வகுப்பு வரை முதல் 3 இடங்களை பிடித்த மாணவா், மாணவிகளுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆசிரியை ராதிகா நன்றி கூறினாா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜெயந்திரா பள்ளிக் குழுமங்களின் இயக்குநா் ஜெயந்திரன் வி.மணி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.