/

அம்பை கல்லுாரியில் பேராசிரியா்கள் போராட்டம்

News image
போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியா்கள்.
Updated On :22 ஜனவரி 2026, 9:28 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் கலைக் கல்லூரி பேராசிரியா்கள் 2ஆவது நாளாக வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டதில் ஈடுபட்டனா்.

தமிழக அரசு 11.01.2021 நாளிட்ட அரசாணை எண் 5இன்படி, அரசுக் கல்லூரி பேராசிரியா்களுக்கு வழங்கி வருவதுபோல, அரசு உதவிபெறும் கல்லூரி பேராசிரியா்களுக்கும் பணி மேம்பாடு ஊதியத்தை, நிலுவைத் தொகையுடன் உடனடியாக வழங்க வலியுறுத்தி, அம்பை கலைக் கல்லூரியின் மூட்டா கிளை சாா்பாக கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை முதல் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

2ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டம் நடைபெற்றது.