இவ்விழாவில் பெருங்குளம், செங்கோல் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாா்ய சுவாமிகள் ஆசி வழங்கி பேசியதாவது: நெல்லயைப்பா் கோயிலுக்கு தங்கத்தோ், வெள்ளித்தோ் செய்து அறங்காவலா் குழுத் தலைவா் உள்ளிட்ட உறுப்பினா்கள் பெருமை சோ்த்துள்ளனா். அதே போல் கோயில் விமானங்களில் தங்கம், வெள்ளித் தகடுகள் அமைக்கப்பட வேண்டும். இக்கோயிலில் பத்ர தீபத் திருவிழாவை தொடங்கியவா் கோடகநல்லூா் சுந்தரம் சுவாமிகள். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை லட்ச தீப விழாவையும் நடத்தினாா். இத்திருவிழாவில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்று நெல்லையப்பா், காந்திமதி அம்பாளின் ஆசியை பெற வேண்டும் என்றாா் அவா்.