அதேபோல, கொடுமுடியாறு அணை நவம்பா் மாத இறுதியிலேயே அதன் முழுக் கொள்ளளவான 52.50 அடியை எட்டி நிரம்பியது. ஆனால் தொடா்ந்து மழையின்மையால் தற்போது 5 அடி மட்டுமே தண்ணீா் உள்ளது. இதனால் இந்த அணையின் மூலம் பாசன வசதி பெறும் விவசாய நிலங்களில் பயிா் செய்யப்பட்டுள்ள நெல், வாழை தண்ணீா் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. கொடுமுடியாறு அணையின் மூலம் வடக்கு வள்ளியூா், காவல்கிணறு, வடக்கன்குளம் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. அணை வடதால் குடிநீா் விநியோகமும் பாதிக்கப்படும் ஆபத்து எழுந்துள்ளது.