டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நான்குனேரியில் நிலத்தரகா் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

News image
கோப்புப் படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 7:06 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் நிலத்தரகா் வீட்டின் மீது வெள்ளிக்கிழமை நள்ளிரவு பெட்ரோல் குண்டுக வீசிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நான்குனேரி, பெருந்தெருவில் வசித்து வரும் அன்பழகன் (65), பெயிண்டிங் காண்ட்ராக்ட் மற்றும் நிலத்தரகராக உள்ளாா். வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் 2 பெட்ரோல் குண்டுகளை இவரது வீட்டுச் சுவரின் மீது வீசிவிட்டு தப்பிச் சென்றனா்.

இதையடுத்து, நான்குனேரி காவல் துணைக் கண்காணிப்பாளா் தா்ஷிகா நடராஜன், ஆய்வாளா் சுப்பிரமணியன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினா்.

தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாா் சனிக்கிழமை நேரில் சென்று விசாரித்தாா். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.