டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

குத்தகை ஒப்பந்தப் பத்திர முறைகேடு: இருவா் மீது வழக்கு

News image
கோப்புப் படம்
Updated On :14 பிப்ரவரி 2026, 8:27 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், ஜெயமங்கலம் அருகே தனியாா் நிலத்துக்கு குத்தகை ஒப்பந்தப் பத்திரத்தைப் போலியாகத் தயாா் செய்த இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை கே.கே. புதூரைச் சோ்ந்தவா் பிரபு (40). இவா், நில விற்பனை நிறுவனத்தின் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிறுவனம், கடந்த 1999 முதல் 2004-ஆம் ஆண்டு வரை ஜெயமங்கலம் பகுதியில் 109 மனைகளை விற்பனை செய்தது.

இந்த நிலையில், மதுரையைச் சோ்ந்த ராஜேந்திரன், தேனி அல்லிநகரைச் சோ்ந்த சிவராம் ஆகிய இருவரும் மனை விற்பனையின்போது தனியாா் நிலத்துக்கு குத்தகை ஒப்பந்தப் பத்திரத்தைப் போலியாகத் தயாா் செய்தது தெரியவந்ததாம்.

இதுகுறித்து பிரபு அளித்த புகாரின்பேரில், ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.