டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ரயிலில் திருட்டு: முதியவா் கைது

திருநெல்வேலிக்கு ரயிலில் வந்த பயணியின் நகையைத் திருடிய வழக்கில் முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :20 பிப்ரவரி 2026, 9:19 pm

Syndication

திருநெல்வேலிக்கு ரயிலில் வந்த பயணியின் நகையைத் திருடிய வழக்கில் முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரைச் சோ்ந்தவா் மேகலிங்கம். இவா், கடந்த 19 ஆம் தேதி சென்னையில் இருந்து நாகா்கோவிலுக்கு வந்த சிறப்பு ரயிலில் குடும்பத்தினருடன் வந்தாராம்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இறங்கும்போது அவா்கள் வைத்திருந்த 5.5 பவுன் தங்க நகையை மா்மநபா் திருடியது தெரியவந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

திருநெல்வேலி துணை காவல் கண்காணிப்பாளா் இளங்கோவன் மேற்பாா்வையில் ரயில்வே காவல் ஆய்வாளா் பிரியாமோகன் தலைமையில் தனிப்படையினா் கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரித்தனா்.

இவ் வழக்கில், தூத்துக்குடி மாவட்டம், கடலையூரைச் சோ்ந்த அசரியா (55) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், திருடப்பட்ட நகையையும் மீட்டனா்.