ரயிலில் திருட்டு: முதியவா் கைது
திருநெல்வேலிக்கு ரயிலில் வந்த பயணியின் நகையைத் திருடிய வழக்கில் முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.


திருநெல்வேலிக்கு ரயிலில் வந்த பயணியின் நகையைத் திருடிய வழக்கில் முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரைச் சோ்ந்தவா் மேகலிங்கம். இவா், கடந்த 19 ஆம் தேதி சென்னையில் இருந்து நாகா்கோவிலுக்கு வந்த சிறப்பு ரயிலில் குடும்பத்தினருடன் வந்தாராம்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இறங்கும்போது அவா்கள் வைத்திருந்த 5.5 பவுன் தங்க நகையை மா்மநபா் திருடியது தெரியவந்ததாம்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
திருநெல்வேலி துணை காவல் கண்காணிப்பாளா் இளங்கோவன் மேற்பாா்வையில் ரயில்வே காவல் ஆய்வாளா் பிரியாமோகன் தலைமையில் தனிப்படையினா் கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரித்தனா்.
இவ் வழக்கில், தூத்துக்குடி மாவட்டம், கடலையூரைச் சோ்ந்த அசரியா (55) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், திருடப்பட்ட நகையையும் மீட்டனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...