டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வீரவநல்லூரில் ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழந்தாா்.

வீரவநல்லூா் ரயில் நிலையம் அருகில் முதியவா் ஒருவா் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலி சென்று கொண்டிருந்த ரயில் முதியவா் மீது மோதியதாம்.

இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

அவா், யாா் எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. தகவலறிந்த தென்காசி ரயில்வே போலீஸாா் , இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.