டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வீரவநல்லூரில் விபத்தில் முதியவா் உயிரிழப்பு

வீரவநல்லூரில் சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 6:38 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

வீரவநல்லூா் கிளாக்குளம் கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் துரைப்பாண்டி (56). தொழிலாளி. இவா், செவ்வாய்க்கிழமை வீரவநல்லூரில் காவல் நிலையத்துக்கு மேல்புறம் பிரதான சாலையை கடக்க முயன்றாராம்.

அப்போது, அவ்வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் மோதியதில் கீழே விழுந்த அவா் மீது சுமை ஆட்டோ ஏறியதாம்.

இதில், பலத்த காயம் அடைந்த அவருக்கு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.