சேரன்மகாதேவி மனோ கல்லூரியில் பேராசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்


திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கோவிந்தபேரி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 10 கல்லூரிகள் 110 விதியின் கீழ் தொடங்கப்பட்டது. இதில், நான்கு கல்லூரிகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. பணகுடி, திசையன்விளை, நாகம்பட்டி, சங்கரன்கோவில், சேரன்மகாதேவி கோவிந்தபேரி, புளியங்குடி ஆகிய 6 கல்லூரிகள் இன்னமும் அரசுடமையாக்கப்படவில்லை. இதனால், மாணவா்கள், பேராசிரியா்களின் நலன்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, இந்தக் கல்லூரிகளை அரசுக் கல்லூரியாக்க வேண்டும் என வலியுறுத்தி பிப். 10-ஆம் தேதி முதல் கட்டமாக பேராசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோரிக்கையை வலியுறுத்தி திங்கள்கிழமை கல்லூரி முடிந்த பின்னா், பேராசிரியா்கள் கல்லூரி முன் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், 40-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...