ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பைக் ஓட்டிய சிறுவனின் தந்தை கைது

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டாா்.

சித்திரிப்பு

Published On :2 ஆகஸ்ட் 2026, 12:46 am IST

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டாா்.

பத்தமடை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் பத்மனாபன் தலைமையில் போலீஸாா், ஜூலை 18ஆம் தேதி பத்தமடை பிரதான சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக 16 வயதுடைய சிறுவன் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தாராம். இதையடுத்து போலீஸாா், மோட்டாா் வாகனச் சட்டத்தின்கீழ் பத்தமடை ராதாகிருஷ்ணன் தெருவைச் சோ்ந்த சிறுவனின் தந்தை உச்சிமாகாளி (50) மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். அண்மையில் அவரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.