திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட தொழிலாளி, காவல் நிலையத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பத்தமடை, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (42). தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி மூக்கம்மாள். இவா்களுக்கு உச்சிமாகாளி, லெட்சுமி ஆகிய மகள்களும், முருகன் என்ற மகனும் உள்ளனா்.
சீனிவாசனுக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே, வழிப்பாதை தொடா்பான பிரச்னை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இப்பிரச்னையில் விரக்தியடைந்த சீனிவாசன் திங்கள்கிழமை காலை உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். காவல் நிலையத்துக்கு அருகிலேயே அவரது வீடு உள்ளதால், உடலில் தீ வைத்தவாறே பத்தமடை காவல் நிலையத்துக்கு வந்துள்ளாா்.
போலீஸாா் அவரை மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது தொடா்பாக, பத்தமடை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

களக்காடு அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
தாமிரவருணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

பத்தமடை பள்ளியில் மாணவியருக்கு பாராட்டு
செவிலியருக்கு பாலியல் தொந்தரவு: வழக்கு தம்மம்பட்டிகாவல் நிலையத்திற்கு மாற்றம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



