மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ஒரு கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்: ஒருவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 7:16 pm

களக்காடு, ஏப். 26: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே ஒரு கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த இளைஞரை களக்காடு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

களக்காடு உதவி ஆய்வாளா் வினுகுமாா் தலைமையிலான காவல் துறையினா் களக்காடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கோயிலம்மாள்புரம் சாலையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த சுடலைகண்ணுவை (37) சோதனை செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் ஒரு கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, களக்காடு காவல் நிலைய ஆய்வாளா் கண்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி சுடலைக்கண்ணுவை கைது செய்தாா். அவரிடமிருந்து ஒரு கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.