களக்காடு, ஏப். 26: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே ஒரு கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த இளைஞரை களக்காடு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
களக்காடு உதவி ஆய்வாளா் வினுகுமாா் தலைமையிலான காவல் துறையினா் களக்காடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, கோயிலம்மாள்புரம் சாலையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த சுடலைகண்ணுவை (37) சோதனை செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் ஒரு கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, களக்காடு காவல் நிலைய ஆய்வாளா் கண்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி சுடலைக்கண்ணுவை கைது செய்தாா். அவரிடமிருந்து ஒரு கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஒசூரில் 172 கிலோ புகையிலைப் பொருள்களுடன் காா் பறிமுதல்; 2 போ் கைது

400 கிலோ புகையிலைப் பொருள்கள் வாகனத்துடன் பறிமுதல்: இருவா் கைது
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
நெல்லையில் விரைவு ரயிலில் 36 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

