மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நெல்லையில் விரைவு ரயிலில் 36 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

திருநெல்வேலி வழியாக சென்ற விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 36 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:33 pm

திருநெல்வேலி வழியாக சென்ற விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 36 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி ரயில்வே காவல் துணைக் கண்காணிப்பாளா் லட்சுமணன் உத்தரவின் பேரில், திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் சதீஷ், போலீஸாா் அண்ணாதுரை, செல்வகணேஷ், வீரவேல், முகம்மது பிலால் ஆகியோா் அடங்கிய குழுவினா் திருநெல்வேலி சந்திப்பை வந்தடைந்த சென்னை-நாகா்கோவில் விரைவு ரயிலின் முன்பதிவில்லா பெட்டிகளில் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, 4 பைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கேட்பாரற்று கிடப்பது தெரியவந்தது.

மொத்தம் 32 கிலோ 400 கிராம் எடையுள்ள புகையிலைப் பொருள்கள், 3 கிலோ 580 கிராம் எடையுள்ள 69 கூலிப் பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை திருநெல்வேலி உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் ரயில்வே போலீஸாா் ஒப்படைத்தனா்.

ரயில் மூலம் புகையிலைப் பொருள்களை கடத்த முயன்றவா்கள் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகிறாா்கள்.