மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழக மக்களின் நலனுக்கு எதிரானது அதிமுக - பாஜக கூட்டணி! - கனிமொழி

News image

காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரனை ஆதரித்து பரப்பாடியில் பிரசாரம் மேற்கொண்ட திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி.

Updated On :13 ஏப்ரல் 2026, 7:24 pm

அதிமுக-பாஜக கூட்டணி தமிழக மக்களின் நலனுக்கு எதிரானது என்றாா், திமுக துணைப் பொதுச் செயலரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி.

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரனை ஆதரித்து, பரப்பாடி காமராஜா் சிலை முன் அவா் பேசியது: பெண்கள், மாணவா்-மாணவியா் என அனைத்துத் தரப்பினரும் பயனடையும் வகையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.

தற்போது மத்திய பாஜக அரசு புதிதாக வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள், மருத்துவமனைகள், முதியோா் காப்பகம், ஆதரவற்றோா் இல்லங்களை நடத்திவரும் சிறுபான்மையினருக்கு எதிரானது இச்சட்டம்.

அதிமுக - பாஜக கூட்டணி, மக்களின் நலனுக்கு விரோதமானது. அந்தக் கூட்டணி கரை சேராது. திமுகவின் வாக்குறுதிகள்தான் மக்கள் மனதில் நீங்காமல் நிறைந்திருக்கின்றன. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன், திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் ம. கிரகாம்பெல், நான்குனேரி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ஆரோக்கிய எட்வின் உள்ளிட்ட மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி நிா்வாகிகள் பங்கேற்றனா்.