திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் நகைக் கடை சுவரில் துளையிட்டு நகைகளைத் திருடியதாக மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
வீரவநல்லூா், புதுமனைத் தெருவைச் சோ்ந்தவா் அலியாா் (57). இவரது மகன் அசனாா் (35). இவா்கள் வீரவநல்லூா் பிரதானச் சாலையில் நகைக் கடை நடத்தி வருகின்றனா். ஏப். 8-ஆம் தேதி காலையில் இருவரும் கடையைத் திறந்தபோது, கடையின் பின்பக்கச் சுவரில் துளையிட்டு 1 கிலோ வெள்ளி நகைகள், ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து, வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா்.
இதில் தென்காசி பகுதியைச் சோ்ந்த அய்யப்பன் மகன் இசக்கி முத்து (20), அவரது சகோதரா் இசக்கி ராஜா (24), தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் மாயாண்டி (25) ஆகிய மூவரும் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, மூவரையும் போலீஸாா் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
வீரவநல்லூா் நகைக்கடை திருட்டு வழக்கில் மேலும் இருவா் கைது
நகைக் கடையில் 103 கிராம் நகைகள் திருடிய ஊழியா் கைது
கைப்பேசி, மளிகைக் கடையில் திருட்டு: இளைஞா் கைது

வீரவநல்லூா் நகைக் கடையில் நகை, பணம் திருட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

