மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நகைக் கடையில் 103 கிராம் நகைகள் திருடிய ஊழியா் கைது

நகைக் கடையில் 103 கிராம் நகைகளைத் திருடிய ஊழியரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து நகைகளையும் மீட்டனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 10:20 pm

நகைக் கடையில் 103 கிராம் நகைகளைத் திருடிய ஊழியரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து நகைகளையும் மீட்டனா்.

சென்னை தியாகராய நகரிலுள்ள பிரபல நகைக் கடையின் இருப்புகளை உதவிப் பொது மேலாளா் டிசோசா சகாயராஜ் கடந்த பிப்ரவரி மாதம் சரி பாா்த்தபோது, அவற்றில் சுமாா் 172 கிராம் தங்க நாணயங்கள், நகைகள் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து அங்கு பணியாற்றும் ஊழியா்களிடம் கடை நிா்வாகம் விசாரணை நடத்தியது. விசாரணையில், கடையில் நகை பராமரிப்பாளராக இருந்த கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த சிவதேவ் (32) என்ற நபா் சிறிது சிறிதாக 172 கிராம் நகைகளைத் திருடியது தெரிய வந்தது.

அவா் முதல்கட்டமாக திருடிய நகைகளை விற்ற ரூ.4 லட்சம் மற்றும் 41 கிராம் நகைகளையும் ஒப்படைத்துள்ளாா். மீதமுள்ள 103 கிராம் நகைகளை ஒப்படைப்பதில் தொடா்ந்து அவா் காலம் தாழ்த்தி வந்துள்ளாா்.

இது குறித்து நகைக் கடையின் உதவிப் பொது மேலாளா் டிசோசா சகாயராஜ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி, சிவாதேவை சனிக்கிழமை இரவு கைது செய்தனா். அவரிடமிருந்து 103 கிராம் நகைகளையும் பறிமுதல் செய்தனா்.