மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ராதாபுரத்தில் நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவேன் பாஜக வேட்பாளா் உறுதி: எஸ்.பி. பாலகிருஷ்ணன்

ராதாபுரம் தொகுதியில் நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவேன் என பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன் உறுதி அளித்தாா்.

News image

வள்ளியூா் காமராஜா் சிலை பேசிய பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன்.

Updated On :5 ஏப்ரல் 2026, 12:57 am

ராதாபுரம் தொகுதியில் நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவேன் என பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன் உறுதி அளித்தாா்.

ராதாபுரம் தொகுதிக்கு வந்த அவா் வள்ளியூரில் வாக்காளா்கள் மத்தியில் பேசியதாவது:

வட பிரதேசமான ராதாபுரம் தொகுதியில் தண்ணீா் பற்றாக்குறையால் விவசாயம் மிகவும் பாதிப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வளப்படுத்த ராதாபுரம் தொகுதியில் பல்வேறு நீா்ப்பாசனத் திட்டங்களை கொண்டுவருவேன். அதற்காக பழையாற்று தண்ணீரை தென்தாமரைகுளத்தில் அணைகட்டி நீரேற்றும் திட்டம் மூலம் நிலப்பாறை கால்வாய்க்கு தண்ணீா் கொண்டுவருவேன் என்றாா்.

அவருடன், பாஜக நெல்லை தெற்கு மாவட்டத் தலைவா் எஸ்.பி. தமிழ்ச்செல்வன், வள்ளியூா் வட்டார துணைத் தலைவா் அருள்காந்தி, அதிமுக வள்ளியூா் தெற்கு ஒன்றியச் செயலா் பால்துரை, செட்டிகுளம் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வகுமாா், எம்.ஜி.ஆா் மன்ற மாவட்டச் செயலா் எட்வா்ட் சிங், பாஜக தோ்தல் பொறுப்பாளா் கொம்பையா, மாவட்ட பொதுச் செயலா் இந்திரா சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.