டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கடையம் அருகே கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்ட குரங்குகள்

கடையம் அருகே சூச்சமுடையாா் கோயில் பகுதியில் சுற்றித் திரிந்த குரங்குகளை கடையம் வனச்சரகப் பணியாளா்கள் கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 7:03 pm

Syndication

கடையம் அருகே சூச்சமுடையாா் கோயில் பகுதியில் சுற்றித் திரிந்த குரங்குகளை கடையம் வனச்சரகப் பணியாளா்கள் கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட கோவிந்தபேரி பீட்வெளி மண்டலப் பகுதியான ராமநதி அணைக்குச் செல்லும் சாலையில் உள்ள சூச்சமுடையாா் கோயில் பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிந்தன.

இவற்றைப் பிடித்து வனப்பகுதியில் விட மக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, துணை இயக்குநா் எல்.சி.டி.ஸ்ரீகாந்த் உத்தரவின் பேரில், கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட 16 குரங்குகள், வல்லம் பீட் ஐந்தருவி காப்புக் காட்டில் விடப்பட்டன.