கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

தமிழகத்தில் தென் மாவட்டங்களை ஒருங்கிணைத்து தனி மாநிலம் அமைக்க வேண்டும்: அா்ஜுன் சம்பத்

தமிழகத்தில் தென் மாவட்டங்களை ஒருங்கிணைத்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் விருப்பம்

News image
அா்ஜுன்  சம்பத்
Updated On :31 டிசம்பர் 2024, 8:36 pm

Din

அம்பாசமுத்திரம்: தமிழகத்தில் தென் மாவட்டங்களை ஒருங்கிணைத்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் விருப்பம் தெரிவித்தாா்.

அம்பாசமுத்திரம் தாமிரவருணி நதிக்கரையில் உள்ள மரகதாம்பிகை உடனுறை காசிநாதா் கோவிலில், அா்ஜுன் சம்பத் செவ்வாய்க்கிழமை வழிபாடு நடத்தினாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசியதாவது:

காசிநாதா் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருப்பது வேதனைக்குரியது.

அம்பாசமுத்திரத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கு பாரபட்சம் இன்றி கடைகளை ஒதுக்க வேண்டும். கோயில் இடங்களை ஆக்கிரமித்து பல மதத்தினா் வீடுகள் மற்றும் கட்டடங்கள் கட்டி வருவது தடுக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதை தமிழக அரசு முறையாக பயன்படுத்தாமல் ஊழல் செய்து வருகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் தராதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவதால் வளா்ச்சி திட்டப் பணிகள் கொண்டுவரப்படாமல் உள்ளன. எனவே, தென் மாவட்டங்களை ஒருங்கிணைத்து தனி மாநிலமாக அமைக்க வேண்டும்.

தமிழா்களுக்கு சித்திரை முதல் நாள்தான் புத்தாண்டு. ஜனவரி புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் இரவு நேரத்தில் பூஜையை தடை செய்ய வேண்டும் என்றாா்.

கோட்டத் தலைவா் பால்ராஜ், செயலா் துா்க்கை முத்து, மாநிலச் செயலா்கள் வசந்த், பொன்னுசாமி, மாவட்ட பொதுச் செயலா் சுடலைமுத்துக்குமாா், செயலா் சின்னதுரை, வஜ்ர சேனா ரமேஷ், முன்னாள் பாஜக நகரத் தலைவா் சுகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.