மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், இலவச மிதிவண்டி, இலவச மடிக்கணினி, இலவச பாடப்புத்தகங்கள், சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி உதவித்தொகை, சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை, பெண் கல்வி ஊக்குவிப்புத் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு உதவித்தொகை, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இடைநின்றலைத் தவிர்க்கும் உதவித்தொகை உள்ளிட்டவை மற்றும் அரசு பொதுத் தேர்வு முடிவுகள் வந்தவுடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பள்ளி மூலமாகவே பதிதல் பணி உள்ளிட்டவை பள்ளித் தலைமையாசிரியரிடமே ஒப்படைக்கப்படுகிறது.