பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

அரசுப் பேருந்து டிக்கெட்டுகளில் தவறாக பதிவாகும் தேதி

கடையநல்லூர், மே 18: அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகள் சிலவற்றில் வழங்கப்படும் பயணச் சீட்டில், சரியான தேதி பதிவாகாத நிலையுள்ளதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தனியார் நிறுவனங்களில்

Updated On :20 செப்டம்பர் 2012, 3:42 am

கடையநல்லூர், மே 18: அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகள் சிலவற்றில் வழங்கப்படும் பயணச் சீட்டில், சரியான தேதி பதிவாகாத நிலையுள்ளதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தமிழக அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகள் பெரும்பாலானவற்றில், மின்னணு சாதனத்தை பயன்படுத்தி டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. சில பேருந்துகளில் மட்டும் சாதாரண வகை டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.

இந்த மின்னணு சாதனத்தின் மூலம் பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட்டுகளில் போக்குவரத்துக் கழக கிளையின் பெயர், தேதி, நேரம், பயணி ஏறிய இடம், இறங்க வேண்டிய இடம் உள்ளிட்டவை அச்சிடப்பட்டிருக்கும்.

இந்நிலையில், சில பேருந்துகளில் வழங்கப்படும் டிக்கெட்டுகளில் தேதி தவறாக அச்சடிக்கப்பட்டு வழங்கப்படுவதாக (படம்) கூறப்படுகிறது. இதன் காரணமாக தனியார் நிறுவன ஊழியர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கிறார்கள்.

இது தொடர்பாக தனியார் நிறுவன ஊழியரான, சொக்கம்பட்டி முருகேசன் கூறியதாவது:

தனியார் நிறுவனங்களில், பொருள்களை சந்தைப்படுத்தும் பணியில் இருப்பவர்களுக்கு பயணப்படி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பயணம் செய்த டிக்கெட்டுகளை இணைத்து அனுப்ப வேண்டும்.

முன்பெல்லாம் சாதாரண வகை டிக்கெட்டுகளில் பயண தேதி குறிப்பிடப்படாத நிலை இருந்து வந்தது. இதனால், பயணச் செலவுகளை சரியாக பெற முடிந்தது. ஆனால், தற்போது தேதியுடன் டிக்கெட் வழங்கப்படும் நிலையில், அது சரியான தேதியாக இருந்தால்தான் பயணக் கட்டணத்தைப் பெற வசதியாக இருக்கும்.

சில பேருந்துகளில் டிக்கெட் வழங்கும் மின்னணு சாதனத்தில் சரியான தேதியை நடத்துநர்கள் பதிவு செய்யாத நிலையுள்ளது. இதனால், தவறான தேதியுடன் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.

உதாரணமாக 18-5-11 அன்று சொக்கம்பட்டியிலிருந்து, கடையநல்லூருக்கு செல்வதற்காக எடுத்த டிக்கெட்டில் தேதி 10-4-2000 என குறிப்பிடப்பட்டுள்ளது. 2000-ம் ஆண்டில் அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் மின்னணு வசதியுடன் கூடிய டிக்கெட் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றார் அவர்.

எனவே, அரசுப் பேருந்து நடத்துநர்கள் சரியான தேதியுடன் கூடிய பயண டிக்கெட்டுக்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.