மாவட்டச் செயலர் பொறுப்பில் இருந்து விலக நேரிட்டவுடனேயே, தனது வாரிசான ஆ. பிரபாகரனை மாவட்ட அளவில் கட்சியில் ஏதாவது ஒரு பொறுப்புக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார் ஆவுடையப்பன். இருப்பினும், அவர் எதிர்பார்த்த அளவுக்கு பொறுப்பு கிடைக்காதபோதிலும், தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர் பொறுப்பை தனது மகன் பிரபாகரனுக்கு பெற்றுத் தந்தார். இன்றுவரை அந்த பொறுப்பில் பிரபாகரன் தொடர்கிறார். பிரபாகரனின் அரசியல் பிரவேசம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. வருங்காலங்களில் ஆவுடையப்பனின் இடத்தை பிரபாகரனே நிரப்புவார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.