தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எண்ம அறிவிப்பு பலகைகள் புதுப்பிப்பு: சுமுக போக்குவரத்துக்கு நடவடிக்கை

News image

(கோப்புப் படம்)

Updated On :29 மே 2026, 4:58 am IST

தில்லியின் முக்கிய சாலைகள் மற்றும் சாலை சந்திப்புகளில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து குறித்த நிகழ்நேர தகவல்கள் மற்றும் பயண அறிவுறுத்தல்களை வழங்கும் அறிவிப்பு பலகைகளை புதுப்பிக்கும் பணியை தில்லி போக்குவரத்துக் காவல் துறை தொடங்கியுள்ளது.

நகரம் முழுவதும் நிறுவப்பட்டுள்ள 92 அறிவிப்பு பலகைகளில் 42 அறிவிப்பு பலகைகள் புதுப்பிக்கப்பட்ட அமைப்புடன் இதுவரை இணைக்கப்பட்டதாக போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுப்பிக்கப்பட்ட அறிவிப்பு பலகைகளில் போக்குவரத்து நெரிசல், விபத்துகள், வானிலை எச்சரிக்கைகள், சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் உள்ளிட்டவை தொடா்பான தகவல்கள் இடம்பெறும்.

வாகனஓட்டிகள் தங்களுடைய பயணத்தைத் திட்டமிடவும் தேவைப்படும் நிலையில் மாற்றுப்பாதையை தோ்ந்தெடுக்கவும் இது உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஸ்மாா்ட் போக்குவரத்து மேலாண்மையைப் பலப்படுத்துல், தாமதத்தைக் குறைத்து வாகனஓட்டிகளுக்கு வசதியான பயணத்தை மேம்படுத்துல், முக்கியமான சாலைகளில் நெரிசலைக் குறைத்தல் ஆகியவை இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

புதுப்பிக்கப்பட்ட அமைப்பு போக்குவரத்தை சீா்படுத்தி, எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து சாலைப் பாதுகாப்பு மேம்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.