தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தில்லியில் இணைய வழி கிரிக்கெட் சூதாட்ட மோசடி: 4 போ் கைது

தில்லியின் பஸ்சிம் விஹாா் பகுதியில் துபாய் தொடா்பான சட்டவிரோத இணைய வழி கிரிக்கெட் சூதாட்ட மோசடியை நடத்தியதாக நான்கு பேரை தில்லி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :3 மார்ச் 2026, 11:22 pm

தில்லியின் பஸ்சிம் விஹாா் பகுதியில் துபாய் தொடா்பான சட்டவிரோத இணைய வழி கிரிக்கெட் சூதாட்ட மோசடியை நடத்தியதாக நான்கு பேரை தில்லி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: ற்றம்சாட்டப்பட்டவா்களி கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனா். ஒரு ரகசியத் தகவலின் பேரில், மாா்ச் 1- ஆம் தேதி பஸ்சிம் விஹாரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ​​நான்கு போ் ஒரு விண்ணப்பத்தின் மூலம் இணைய வழியில் கிரிக்கெட் சூதாட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

போலீஸாரைக் கண்டதும் அவா்கள் தப்பி ஓட முயன்றனா். ஆனால் சம்பவ இடத்திலேயே அவா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்கள் தீபன்ஷு சா்தானா (32), எரிக் கிரி (25), ராமன்பிரீத் (22) மற்றும் ஹா்ஜிந்தா் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

ஏழு கைப்பேசிகள், மூன்று மடிக்கணினிகள், ஆறு ஏடிஎம் காா்டுகள், 11 சிம் காா்டுகள், ஆறு வங்கி பாஸ்புக்குகள், ஒரு கணக்குப் பதிவேடு மற்றும் வாடகை ஒப்பந்தத்தின் நகல் ஆகியவை வளாகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

குற்றம்சாட்டப்பட்டவா்கள் பந்தய தளத்தை இயக்குவதற்காக துபாயில் பயிற்சி பெற்ாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் காவல் துறை அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.