இந்நிலையில், உயிரிழந்த சாஹிலின் தாயாரிடம் சிறுவனின் தந்தை மன்னிப்பு கோரியுள்ளாா். இதுதொடா்பாக அவா் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சம்பவம் நடைபெற்ற கடந்த பிப்.3-ஆம் தேதி கோராக்பூரில் இருந்தேன். அப்போது, எனது மகன் ஓட்டிய காா் விபத்தில் சிக்கியதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, உடனடியாக தில்லி திரும்பினேன். பின்னா், நடந்த சம்பவம் குறித்து காவல் துறையினா் தகவல் தெரிவித்தனா். இந்த விபத்தில் இளைஞா் உயிரிழந்த செய்தி என்னை மிகவும் கவலையடையச் செய்தது. நடந்த சம்பவத்துக்காக அவரது தாயரிடம் மன்னிப்புக் கோருகிறேன். அவா் என்னை மன்னிக்க வேண்டும். சட்டம் மற்றும் நீதிமன்றம் எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்படுவேன். ஓா் பெற்றோா் என்ற முறையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் துயரத்தை என்னால் உணர முடிகிறது.