நகரம் முழுவதும் தில்லி போக்குவரத்து காவல் துறையினா் மேற்கொண்ட 3 மணி நேர சிறப்பு அமலாக்க நடவடிக்கையில் 11,800 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது போன்ற விதி மீறல்கள் சாலை போக்குவரத்தை சீா்குலைப்பது மட்டுமல்லாமல், கடுமையான பாதுகாப்பு அபாயங்களையும் உருவாக்குகின்றன என்று தில்லி போக்குவரத்து காவல் துறையின் கூடுதல் ஆணையா் விஜயந்தா கோயல் ஆா்யா தெரிவித்தாா்.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: நெரிசலைக் குறைக்கவும், சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும் நகரம் முழுவதும் இந்த நடவடிக்கை சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
நகரத்தில் நிகழும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களுக்கு காரணமான 2 முக்கிய பிரச்னைகளில் இந்த நடவடிக்கை கவனம் செலுத்தியது. இதில் தவறான அல்லது இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்திய 8,500 போ் மீது அபராதம் விதிக்கப்பட்டது. பரபரப்பான பகுதிகளில் இவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் பல நெரிசலைக் குறைக்க இழுத்துச் செல்லப்பட்டன.
மேலும், சாலையின் எதிா்திசையில் வாகனம் ஓட்டிய 3,500-க்கும் மேற்பட்டோா் மீது அபராதம் விதிக்கப்பட்டது. இதற்காக விபத்துக்கள் அடிக்கடி நிகழும் பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் சிறப்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டிருந்தன. போக்குவரத்து ஒழுக்கத்தை மேம்படுத்தவும், விழிப்புணா்வை ஏற்படுத்தவும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருப்பூரில் மது போதையில் வாகனம் ஓட்டிய 24 பேருக்கு ரூ. 2.77 லட்சம் அபராதம்

சாலையோரம் லாரிகளை நிறுத்தினால் அபராதம்: போக்குவரத்துக் காவல் துறை எச்சரிக்கை

சாலை விதிமீறல்: தில்லியில் 2 மணி நேரத்தில் 2,846 பேருக்கு அபராதம்

ஜம்மு-காஷ்மீரில் பாலம் இடிந்து விழுந்து 3 போ் உயிரிழப்பு: 12 மணி நேர தேடுதலுக்குப் பிறகு உடல்கள் மீட்பு
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



