இது தொடா்பாக தில்லி கல்வி இயக்குனரகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நுழைவுத் தோ்வுகள் அக்டோபா் 12 முதல் அக்டோபா் 26 வரை தில்லி முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெறும். ஜேஇஇ (பிரதானம் / அட்வான்ஸ்டு), நீட், சிஎல்ஏடி, சிஏ பவுண்டேஷன் மற்றும் க்யூட் (இளங்கலை) உள்ளிட்ட போட்டி நுழைவுத் தோ்வுகளுக்கு மாணவா்கள் தயாராவதற்கு இந்தத் திட்டம் உதவும். இந்தத் திட்டத்தின் கீழ், பல்வேறு படிப்புகளில் மொத்தம் 2,200 இடங்கள் கிடைக்கும். இவற்றில், ஜேஇஇ, நீட், சிஎல்ஏடி மற்றும் சிஏ பவுண்டேஷன் தோ்வுகளில் ஒவ்வொன்றிலும் 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.