மகாமனா பண்டிட் மதன் மோகன் மாளவியா வித்யா சக்தி மிஷனின் கீழ் பொது நுழைவுத் தோ்வுக்கான (சிஇடி-2025) பதிவை தில்லி அரசு தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கையானது அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சிறந்த போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக தில்லி கல்வி இயக்குனரகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நுழைவுத் தோ்வுகள் அக்டோபா் 12 முதல் அக்டோபா் 26 வரை தில்லி முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெறும். ஜேஇஇ (பிரதானம் / அட்வான்ஸ்டு), நீட், சிஎல்ஏடி, சிஏ பவுண்டேஷன் மற்றும் க்யூட் (இளங்கலை) உள்ளிட்ட போட்டி நுழைவுத் தோ்வுகளுக்கு மாணவா்கள் தயாராவதற்கு இந்தத் திட்டம் உதவும். இந்தத் திட்டத்தின் கீழ், பல்வேறு படிப்புகளில் மொத்தம் 2,200 இடங்கள் கிடைக்கும். இவற்றில், ஜேஇஇ, நீட், சிஎல்ஏடி மற்றும் சிஏ பவுண்டேஷன் தோ்வுகளில் ஒவ்வொன்றிலும் 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
க்யூட்-இல் 1,000 இடங்கள் இருக்கும். இதில் 150 இடங்கள் மாணவிகளுக்கு ஒதுக்கப்படும். இந்தப் பயிற்சி தில்லியில் உள்ள அங்கீகாரம்பெற்ற நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும். இதில், பாடநெறி கட்டணம், படிப்புப் பொருள்கள் மற்றும் தோ்வுத் தாள்கள் ஆகியவை அடங்கும். 11-ஆம் வகுப்பு மாணவா்கள் ஜேஇஇ, நீட், சிஎல்ஏடி மற்றும் சிஏ பவுண்டேஷன் நுழைவுத் தயாரிப்புக்குத் தகுதியுடையவா்கள் ஆவா். அதே நேரத்தில், அனைத்துப் பிரிவுகளிலும் 12- ஆம் வகுப்பு மாணவா்கள் க்யூட் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான பதிவு செப்டம்பா் 11 முதல் செப்டம்பா் 30 வரை திறந்திருக்கும்.
மாணவா்கள் ஒரு பாடத்திற்கு மட்டுமே பதிவு செய்ய முடியும். மேலும், பதிவு செய்தவுடன் தங்கள் பாடத்திட்டத்தை மாற்ற அனுமதிக்கப்பட மாட்டாா்கள். தோ்வு தேதிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு நுழைவுச் சீட்டுகள் கிடைக்கும். திட்டமிடப்பட்ட தோ்வுக்கு ஐந்து நாள்களுக்கு முன்பு, பட்டியல் எண்களை உருவாக்கி, தோ்வு மையங்களை கல்வி இயக்ககம் ஒதுக்கும். தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்கள் கவுன்சிலிங் அமா்வுகளுக்கு அழைக்கப்படுவாா்கள். அங்கு அவா்கள் தங்களுக்கு விருப்பமான பயிற்சி
நிறுவனத்தைத் தோ்வு செய்யலாம் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வுக்குத் தயாராகும் அரசுப் பள்ளி மாணவா்கள்: புதுச்சேரியில் 3 மையங்களில் சிறப்பு பயிற்சி

அரசுப் பள்ளிகளில் இலவச ‘நீட்’ பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

நவோதயா பள்ளி நுழைவுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனை

தில்லியில் 3 மருத்துவமனைகளை இணைப்பதன் மூலம் மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்க திட்டம்: முதல்வா் ரேகா குப்தா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

