தில்லியில் காற்று மாசுபாட்டுக்கு எதிரான போராட்டம், கொல்லப்பட்ட மாவோஸிய்ட் தலைவா் மாத்வி ஹிட்மாவுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பப்படுவதாக தில்லி சட்டத் துறை அமைச்சா் கபில் மிஸ்ரா திங்கள்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
தேசிய தலைநகரில் நிலவி வரும் கடுமையான காற்று மாசுபாட்டுக்கு எதிராக இந்தியா கேட் அருகே மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் ஹிம்கண்ட் மற்றும் பிஎஸ்சிஇஎம் எனப்படும் அமைப்புகள் மாத்வி ஹிட்மா குறித்து கோஷங்களை எழுப்பினா்.
இந்த குற்றச்சாட்டை போராட்டத்தில் பங்கேற்ற ஆராய்ச்சியாளா்கள் மற்றும் கல்வியாளா்களின் சட்டபூா்வ குழுவான ‘சமூகத்திற்கான விஞ்ஞானிகள்’ தெரிவித்தது.
இது தொடா்பான விடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு அமைச்சா் கபில் மிஸ்ரா கூறியதாவது: மாசுபாட்டுக்கு எதிரான போராட்டத்தில் சிலா் ‘லால் சலாம்’ கோஷங்களை எழுப்பினா். சமூக ஊடகங்களில் பரவும் இந்த விடியோக்களில் சிலா் மாத்வி ஹிட்மாவை புகழ்கின்றனா். இது போன்ற போராட்டங்களில் ஜிஹாதிகள் மற்றும் நக்ஸல்கள் தங்களை சமூக ஆா்வலா்கள் போல் காட்டிக்கொள்கின்றனா்’ என குறிப்பிட்டிருந்தாா்.
காற்று மாசுபாட்டை முன்னிலைப்படுத்த மட்டுமே போராட்டத்தில் இணைந்ததாகவும், அதற்கு தொடா்பில்லாத கோஷங்களை நிறுத்த முயன்ாகவும் சமூகத்திற்கான விஞ்ஞானிகள் குழு தெளிவுபடுத்தியது.
இதற்கிடையில், காவலா்களை தாக்கியதாக குறைந்தது 15 போ் கைது செய்யப்பட்டனா். போராட்டக்காரா்களை கலைக்க முயன்றபோது, சிலா் காவல் துறையினா் மீது பெப்பா் ஸ்ப்ரே அடித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாக தில்லி காவல் துறை தெரிவித்தது.
மிகவும் தேடப்பட்ட மாவோயிஸ்டுகளின் முக்கிய கமாண்டா்களில் ஒருவரான மாத்வி ஹிட்மா (51) ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் நவ.18-ஆம் தேதி கொல்லப்பட்டாா். அவருடன் சோ்த்து 5 மாவோயிஸ்ட்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார் பிரதமர் மோடி: கபில் சிபல் குற்றச்சாட்டு!

கபில் தேவ், தோனியிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்! யுவராஜ் சிங்

தில்லி காற்று மாசைத் தடுக்கலாம்!

காற்று மாசு - நுரையீரல் புற்றுநோய் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் தில்லி எய்ம்ஸ்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


