மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காற்று மாசு - நுரையீரல் புற்றுநோய் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் தில்லி எய்ம்ஸ்!

காற்று மாசு மற்றும் நுரையீரல் புற்றுநோய் தொடர்பாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு.

News image

காற்று மாசு - கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2026, 11:40 am

காற்று மாசு மற்றும் நுரையீரல் புற்றுநோய் தொடர்பான ஆய்வை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மேற்கொண்டுள்ளது.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையின் உதவிப் பேராசிரியர் அபிஷேக் சங்கர் வழிகாட்டுதலின்பேரில் ஏர்கேர் ஸ்டடி எனப்படும் இந்த ஆய்வு, தில்லி பகுதியில் உள்ள 1,615 நுரையீரல் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான நபர்களிடம் நடத்தப்படவுள்ளது.

இதுபற்றி அபிஷேக் சங்கர் கூறுகையில், ”காற்று மாசு ஒரு பொது சுகாதாரப் பிரச்னையாக அதிகரித்து வருகிறது. இதனைச் சமாளித்து மேலும் உயிரிழப்புகளைத் தடுக்க அதற்கான கொள்கை மற்றும் மேலாண்மை உத்திகளை செயல்படுத்தும் அவசரத் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.

உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் சில இந்தியாவில் உள்ளன. எனவே, மக்களின் உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் மாசுபாடு தொடர்பான அறிவியல் ரீதியான ஆய்வை மேற்கொள்வது உடனடித் தேவை

இந்தியாவில் ஆண்களுக்கு அதிகமாக ஏற்படும் புற்றுநோயில் நுரையீரல் புற்றுநோய் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும், இருபாலருக்கும் ஏற்படும் புற்றுநோயில் இது நான்காம் இடத்தில் உள்ளது.

மேலும், புகைப்பிடிக்காதவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் புற்றுநோய் பெண்கள் மற்றும் இளவயதினரிடம் அதிகளவில் காணப்படுகின்றது.

நுரையீரல் புற்றுநோய்க்கு காற்று மாசுபாடு ஒரு முக்கியக் காரணமாக உருவெடுத்துள்ளது. ஆனால், இந்தியாவில் இந்த விவகாரத்தில் ஆய்வுப்பூர்வமாக மேலும் ஆதாரங்கள் தேவைப்படுகிறது.

புகைப்பிடிப்பவர்களுடன் தொடர்புடைய நோயாக கருதப்பட்ட நுரையீரல் புற்றுநோய், புகைபிடிக்காதவர்களிடையே வேகமாக அதிகரித்து வருவது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், இந்திய மக்கள் தொகைக்கே உரிய ஒரு குறிப்பிட்ட மரபணுவில், காற்று மாசுபாட்டினால் ஏற்படும் ஆரம்பகால மரபணு மாற்றம் பின்னர் நுரையீரல் புற்றுநோயாக உருவாகிறதா என்பதை ஆய்வு செய்யவுள்ளதாகக் குறிப்பிட்ட அபிஷேக் சங்கர், இந்த ஆய்வு, மருத்துவக் கூறுகள் மற்றும் மருத்துவம் அல்லாத கூறுகளை உள்ளடக்கிய சிக்கலான முயற்சி என்று கூறினார்.

Summary

AIIMS-Delhi to study link between lung cancer and air pollution

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.