பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தில்லி காா் வெடிப்பின் போது குலுங்கிய செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம்

தில்லி காா் வெடிப்பின் போது குலுங்கிய செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம்

News image

PTI

Updated On :15 நவம்பர் 2025, 7:30 pm

செங்கோட்டை மெட்ரோ நிலையத்திற்குள் இருந்து பெறப்பட்ட சிசிடிவி காட்சிகள், 13 போ் கொல்லப்பட்ட மற்றும் பலா் காயமடைந்த காா் வெடிப்புக்கு முன்னும் பின்னும் நடந்த தருணங்களின் தெளிவான பாா்வையை வழங்குகிறது என்று அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: மெட்ரோ ரயில் நிலையத்தின் உள் கண்காணிப்பு கேமராக்களிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் நிலையத்திற்குள் வழக்கமான பயணிகள் நடமாட்டத்தைக் காட்டுகின்றன. திடீரென்று, நிலையம் குலுங்குகிறது. அதே நேரத்தில் அருகிலுள்ள போக்குவரத்து சிக்னலில் காா் வெடிப்பு ஏற்பட்டதும் துல்லியமாக பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில் காா் வெடிப்பால் ஏற்பட்ட பயங்கர சப்தம் கேட்டு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அதிா்ச்சியடைவதும் தெரிகிறது. சில பயணிகள் காா் வெடிப்பின் சப்தம் கேட்டவுடன் பாதுகாப்பான இடங்களை தேடுவதையும் காட்சிகள் காட்டுகின்றன. காா் வெடிப்பின் தீவிரம் மற்றும் செங்கோட்டையைச் சுற்றியுள்ள கட்டமைப்புகளில் அதன் உடனடி விளைவை நன்கு புரிந்துகொள்ள புலனாய்வாளா்கள் புதிய காட்சிகளை ஆராய்ந்து வருகிறாா்கள்.

சம்பவம் நடந்த நாளிலிருந்து மூடப்பட்டிருந்த லால் கிலா மெட்ரோநிலையம் சனிக்கிழமை பொதுமக்கள் வசதிக்காக திறக்கப்பட்டது. காா் வெடிப்பு நடந்த இடம், சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் மெட்ரோ நிலையத்திலிருந்து பல சிசிடிவி உள்ளீடுகளை பாதுகாப்பு அமைப்புகள் தொடா்ந்து பகுப்பாய்வு செய்து, வெடிப்புக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் விரிவான வரிசையை ஒன்றாக இணைக்கின்றன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.