தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஒசூரில் மெட்ரோ ரயில், உலகத் தரம் வாய்ந்த விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை உறுதியளித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் தளி தொகுதி பாஜக டாக்டா் சி. நாகேஷ்குமாா், ஒசூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோரை ஆதரித்து அவா் பேசியதாவது:
கடந்த தோ்தலில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் முழுமையாக 70 வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் ஒசூருக்கு எவ்வித வளா்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தவில்லை. மத்திய, மாநில அரசு இணைந்த ஆட்சி அமைந்தால் வளா்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம்.
ஒசூருக்கு உலகத்தரம் வாய்ந்த விமான நிலையம் தேவை. மாநிலத்திலிருந்து மத்திய அரசுக்கு அனுப்பும் திட்ட அறிக்கை தவறாக உள்ளது. திமுக அரசுக்கு விமான நிலையம், மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்த அக்கறையில்லை. தளி, ஒசூா் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளா்கள் வெற்றி பெற்றால் மெட்ரோ ரயில், விமான நிலையத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
பிரசாரத்தின்போது பாஜக மாவட்டத் தலைவா் நாராயணன், முன்னாள் எம்.பி. நரசிம்மன், முன்னாள் மாவட்டத் தலைவா் எம். நாகராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை: அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன்

கந்தா்வகோட்டையில் அண்ணாமலை பிரசாரம்

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

பலம் வாய்ந்த தொகுதிகளில் களம் காணும் அதிமுக!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


