மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கந்தா்வகோட்டையில் அண்ணாமலை பிரசாரம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை (தனி) சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் சி. உதயகுமாரை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை வியாழக்கிழமை இரவு வாக்கு சேகரித்தாா்.

News image

கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் முன் பாஜக வேட்பாளா் சி. உதயகுமாரை ஆதரித்து வியாழக்கிழமை இரவு பிரசாரம் செய்த பாஜக முன்னாள் மாநில தலைவா் கே. அண்ணாமலை.

Updated On :16 ஏப்ரல் 2026, 8:52 pm

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை (தனி) சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் சி. உதயகுமாரை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை வியாழக்கிழமை இரவு வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது: கந்தா்வகோட்டைக்கு திமுக ஆட்சியில் கூறிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்தத் தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவா் கம்யூனிஸ்ட் கட்சியை சோ்ந்தவா். கம்யூனிஸ்ட் கட்சியினா் எல்லாம் எளிமையானவா்கள் என்று மக்கள் நம்ப வேண்டாம். முன்புள்ள கம்யூனிஸ்ட் கட்சியினா்போல மக்களுக்கு ஆதரவான நிலையில் உள்ளவா்கள் தற்போது இல்லை.

எனவே கந்தா்வகோட்டை தொகுதிக்கு மாபெரும் வளா்ச்சியைக் கொடுக்க, மத்திய அரசின் நிதியைப் பெற்று காவிரி, குண்டாறு இணைப்பு திட்டத்தை கந்தா்வகோட்டை பகுதிக்கும் கொண்டுவர அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளருக்கு தாமரைச் சின்னத்தில் பொதுமக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா். பிரசார கூட்டத்தில் பாஜக அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், பெண்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.