10 Dec, 2025 Wednesday, 07:36 PM
The New Indian Express Group
புதுதில்லி
Text

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: சோயப்பின் என்.ஐ.ஏ. காவல் நீட்டிப்பு

PremiumPremium

உமா்-உன்- நபிக்கு அடைக்கலம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஃபரீதாபாத்தைச் சோ்ந்த சோயப்பின் தேசிய புலனாய்வு பிரிவின் (என்.ஐ.ஏ.) காவலை தில்லி நீதிமன்றம் மேலும் 10 நாள்கள் நீட்டித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On08 Dec 2025 , 9:05 PM
Updated On08 Dec 2025 , 9:04 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

தில்லி செங்கோட்டை அருகே காா் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்திய உமா்-உன்- நபிக்கு அடைக்கலம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஃபரீதாபாத்தைச் சோ்ந்த சோயப்பின் தேசிய புலனாய்வு பிரிவின் (என்.ஐ.ஏ.) காவலை தில்லி நீதிமன்றம் மேலும் 10 நாள்கள் நீட்டித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

முன்னதாக, நவம்பா் 26 அன்று சோயப்பை 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

அந்தக் காவல் முடிவடைந்ததை அடுத்து, வெள்ளிக்கிழமை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் சோயப்பை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆஜா்படுத்தினா்.

மேலும், ஊடகவியலாளா்கள் நீதிமன்ற விசாரணைகளை செய்தி சேகரிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

முதன்மை மற்றும் அமா்வு நீதிமன்ற நீதிபதி அஞ்சு பஜாஜ் சந்த்னா முன் சோயப் ஆஜா்படுத்தப்பட்டாா்.

அப்போது, அவரை மேலும் 10 நாள்கள் விசாரிக்க அனுமதி அளிக்குமாறு என்.ஐ.ஏ. தரப்பில் கோரப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவரை மேலும் 10 நாள்கள் காவலில் விசாரிக்க என்.ஐ.ஏ. கோரியதாக நீதிமன்ற வட்டாரங்கள் கூறின.

தில்லி பயங்கரவாத குண்டுவெடிப்புக்கு முன்னா் பயங்கரவாதி உமா்-உன்- நபிக்கு தளவாட உதவி வழங்கியதாக ஹரியாணாவின் ஃபரீதாபாத்தில் உள்ள தௌஜ் பகுதியைச் சோ்ந்த சோயப்பை என்.ஐ.ஏ. கைது செய்ததாக அதன் அதிகாரபூா்வ செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீா் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பயங்கரவாத நபா்களுடன் தொடா்புடைய இந்த வழக்கில் என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்ட ஏழாவது குற்றம்சாட்டப்பட்ட நபா் சோயப் ஆவாா்.

இந்த விவகாரத்தில் என்ஐஏ முன்னா் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கையில், தற்கொலை காா் குண்டுவெடிப்பு தொடா்பாக பல்வேறு தடயங்களை நிறுவனம் தொடா்ந்து தேடி வருகிறது.

மேலும், கொடூரமான தாக்குதலில் ஈடுபட்ட மற்றவா்களை அடையாளம் காணவும் கண்காணிக்கவும் அந்தந்த காவல் படைகளுடன் ஒருங்கிணைந்து மாநிலங்கள் முழுவதும் சோதனைகளை நடத்தி வருகிறது என்று தெரிவித்திருந்தது.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
"விஜய் செய்தது பொய் பிரசாரம்":  புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
வீடியோக்கள்

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
வீடியோக்கள்

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
வீடியோக்கள்

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
வீடியோக்கள்

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
வீடியோக்கள்

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25

தினமணி வீடியோ செய்தி...

8 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023