தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு! 4 பேருக்கு என்ஐஏ காவல் நீட்டிப்பு!!
தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு என்ஐஏ காவல் நீட்டிப்பு
தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு என்ஐஏ காவல் நீட்டிப்பு
By இணையதளச் செய்திப் பிரிவு
Vanisri
புது தில்லி: தில்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேரின் தேசிய புலனாய்வு விசாரணைக் காவல் மேலும் 4 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் வழங்கிய 10 நாள்கள் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக் காவல் நிறைவு பெற்ற நிலையில், தில்லி செங்கோட்டை அருகே காா் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட டாக்டர் முஸாம்மில், டாக்டர் அதீல், டாக்டர் ஷாஹீன், மற்றும் மௌல்வி இர்ஃபான் அகமது ஆகியோர், இன்று முதன்மை அமர்வில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க ஊடகத் துறையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பாட்டியாலா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கடுமையான பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், மருத்துவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபட்ட உமர் உன் நபி-உடன் தொடர்பிலிருந்தவர்கள், அடைக்கலம் கொடுத்தவர்கள், உதவியவர்கள் என பல தரப்பிலும் சோதனைகள் நடத்தப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த நவம்பர் 10ஆம் தேதி, தில்லி செங்கோட்டை அருகே, வெடிபொருள்களுடன் வந்த ஐ20 காரை ஓட்டி வந்த டாக்டர் உமர்-உன்-நபி, காரை வெடிக்க வைத்த சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர்.
A Delhi court on Monday extended the NIA custody of three doctors and a preacher, who were arrested in connection with the November 10 Red Fort blast case, by four days.
இதையும் படிக்க.. நடிகை பாலியல் வழக்கில் திலீப் கைதானது எப்படி? பரபரப்பை ஏற்படுத்திய கடிதம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது