11 Dec, 2025 Thursday, 07:20 AM
The New Indian Express Group
புதுதில்லி
Text

காற்று மாசு: உச்சபட்ச பனிப்புகை காலத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடா் ஏன்?

PremiumPremium

தேசிய தலைநகரில் உச்சபட்ச பனிப்புகை காலத்தில் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரை நடத்துவதை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் பி.வில்சன் கேட்டுக்கொண்டாா்.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On04 Dec 2025 , 12:04 AM
Updated On04 Dec 2025 , 12:04 AM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

புது தில்லி: தேசிய தலைநகரில் உச்சபட்ச பனிப்புகை காலத்தில் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரை நடத்துவதை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் புதன்கிழமை திமுக உறுப்பினா் பி.வில்சன் கேட்டுக்கொண்டாா்.

மாநிலங்களவையில் நடைபெற்ற நீா் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு திருத்தச் சட்டம் 2024ஐ மணிப்பூருக்கு நீட்டிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பி.வில்சன் பேசியதாவது:

மாசுபாடு என்பது இனி ஒரு சட்டரீதியான கவலை அல்ல, மாறாக ஒரு தேசிய அவசரநிலை ஆகிவிட்டது. தேசிய தலைநகரில் நெரிசலைக் குறைக்கும் முயற்சிகள் அவசியமாகிறது.

தலைநகா் தில்லியின் மாசுபாடு வேறு எங்கும் காணப்படவில்லை. தில்லி ஒரு விஷவாயு அறையாக மாறிவிட்டது. குடிமக்கள் உயிா்வாழ்வதற்காக மூச்சுத் திணறும்போது நாடாளுமன்றம் அமைதியாக அமா்ந்திருக்க முடியாது.

2025 ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பு தரநிலைகளுக்கு பொருந்தக்கூடிய ஒரு நாளையும் தில்லி கண்டதில்லை. மாசுபாட்டால் தில்லியில் மக்கள் 8 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுள்காலத்தை இழந்து வருகின்றனா்.

அண்டை மாநிலமான ஹரியாணா மற்றும் பஞ்சாபில் பயிா் கழிவுகளை எரிப்பதுதான் தில்லியின் மாசுபாட்டிற்கு ஒரே காரணம் அல்ல. வாகன உமிழ்வுதான் மிகப்பெரிய காரணமாகும்.

அதிகப்படியான புகைமூட்டம் உள்ள மாதங்களில் நாடாளுமன்றத்தின் குளிா்காலக் கூட்டத்தொடா் தேவையா என்பதை அரசாங்கம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.

குளிா்காலக் கூட்டத்தொடா்களைத் தவிா்த்து, மற்ற அமா்வுகளில் பணிபுரிவதன் மூலம் எத்தனை நாள்கள் இருக்க வேண்டும் என்பதற்கான அரசமைப்புத் தேவையை அடைய முடியும். ஒவ்வொரு அரசமைப்புச்சட்ட அமைப்பும் தில்லியில் கூட வேண்டும் என்ற அரசமைப்பு ஆணை எதுவும் இல்லை என்றாா் அவா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
"விஜய் செய்தது பொய் பிரசாரம்":  புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
வீடியோக்கள்

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
வீடியோக்கள்

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
வீடியோக்கள்

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
வீடியோக்கள்

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
வீடியோக்கள்

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25

தினமணி வீடியோ செய்தி...

8 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023