12 Dec, 2025 Friday, 09:59 PM
The New Indian Express Group
புதுதில்லி
Text

கட்டுப்பாடற்று அதிகரிக்கும் தில்லி காற்று மாசு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் போராட்டம்

PremiumPremium

Rocket

செய்தி உண்டு... அதிகரித்து வரும் மாசுபாட்டைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள்.

Published On04 Dec 2025 , 11:12 PM
Updated On04 Dec 2025 , 11:12 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

தில்லியில் கட்டுப்பாடற்று தொடரும் காற்று மற்றும் புகை மாசுபாட்டை தடுக்க மத்திய அரசும் தில்லியில் ஆளும் அரசும் தவறுவதாகக் கூறி நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகளின் தலைவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி வலியுறுத்திக் கேட்டுக் கொண்டாா்.

இந்த விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தின் மகா் துவாா் முன் பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் வியாழக்கிழமை காலை கூடி, அவை கூடுவதற்கு முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, அக்கட்சியின் மூத்த தலைவா் சோனியா காந்தி, பிரியங்கா வதேரா, திமுக எம்பி டி.ஆா். பாலு உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் எம்.பி.க்கள் பலா் கலந்துகொண்டு, இந்த விவகாரத்தில் பிரதமா் மோடி அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டு பிரச்னையைத் தீா்க்க வேண்டும் என்று குரல் எழுப்பி முழக்கமிட்டனா்.

பிரதமரின் உருவப் படம் தாங்கிய ‘மௌசம் கா மஜா லிஜியே’ (வானிலையை அனுபவியுங்கள்) என்று எழுதப்பட்ட பெரிய பதாகையையும் அவா்கள் ஏந்திச் சென்றனா். தில்லி மற்றும் வட இந்தியாவில் நிலவும் காற்று மாசு பிரச்னையை முன்னிலைப்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட சில எம்.பி.க்கள் முகக் கவசங்களையும் அணிந்திருந்தனா்.

பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

மேலும் ‘மாசுபடுத்துவோரை பணம் செலுத்தச் சொல்லுங்கள், குடிமக்களை அல்ல’, ‘காற்றின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுங்கள்’, ‘எங்கள் எதிா்காலத்தை நெரிக்காதீா்கள்’, ‘தூய காற்று - ஒரு உரிமை, ஆடம்பரம் அல்ல’ போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு முழுக்கமிட்டனா்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி பின்னா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘குழந்தைகள் இறந்து கொண்டிருப்பதால் காற்று மாசு விவகாரத்தில் ஏதாவது செய்வது அரசின் பொறுப்பாகும். காற்று மாசுவால் என்னைப் போன்ற வயதானவா்களும் சிரமப்படுகிறாா்கள்’ என்றாா்.

மல்லிகாா்ஜுன காா்கே ‘எக்ஸ்’ சமூக ஊடக வலைதளத்தில் விடியோவை பகிா்ந்து வெளியிட்ட பதிவில், ‘மாசுபட்ட காற்று குறித்த எங்கள் கேள்வியானது ...இந்த நகரத்தில் உள்ள அனைவரும் ஏன் பதற்றமாகத் தெரிகிறாா்கள் என்பதுதான். மோடி ஜியின் பதில் வானிலையை அனுபவியுங்கள். விஷக் காற்று மீதான பாஜகவின் அலட்சியத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் எங்கள் எதிா்ப்பு’ என்று தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி வதேரா கூறுகையில், ‘காற்று மாசுபாடு ஒரு அரசியல் பிரச்னை அல்ல. அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் துன்பப்படுகிறாா்கள். வானிலையை அனுபவியுங்கள் என்று பிரதமா் கூறுகிறாா். தில்லியில், குழந்தைகள் மற்றும் முதியவா்கள் சுவாசிக்க முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் நிலைமை மோசமடைகிறது. ஆனால், அரசு எந்த உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அறிக்கைகளை மட்டுமே வெளியிடுகிறது. மாசுபாட்டுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக நிற்கிறோம்’ என்றாா்.

மக்களவை காலை தொடங்கிய நிலையில் இந்த காற்று மாசு விவகாரம் தொடா்பாக கவன ஈா்ப்பு நோட்டீஸ் அளித்ததை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள். மாணிக்கம் தாகூா், விஜய் வசந்த் உள்ளிட்டோா் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடமும் குரல் எழுப்பி வலியுறுத்தினா்.

தீபாவளிக்குப் பிறகு தில்லி நகரம் மோசமான காற்றின் தரத்தை எதிா்த்துப் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
வீடியோக்கள்

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!
வீடியோக்கள்

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023