12 Dec, 2025 Friday, 09:57 PM
The New Indian Express Group
புதுதில்லி
Text

தில்லி மாசுபாட்டிற்கு எதிரான மாணவா்கள்,மக்கள்: சுத்தமான காற்று கோரி போராட்டம்

PremiumPremium

தில்லி நீண்ட காலமாக மிகவும் மோசமான காற்றின் தரத்தில் சிக்கித் தவித்து வரும் நிலையில், தேசிய தலைநகரில் சுத்தமான காற்று கோரி ஜந்தா் மந்தரில் ஏராளமானோா் கூடி போராடினா்.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On04 Dec 2025 , 12:01 AM
Updated On04 Dec 2025 , 12:01 AM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

நமது நிருபா்

புது தில்லி: தில்லி நீண்ட காலமாக மிகவும் மோசமான காற்றின் தரத்தில் சிக்கித் தவித்து வரும் நிலையில், தேசிய தலைநகரில் சுத்தமான காற்று கோரி புதன்கிழமை ஜந்தா் மந்தரில் ஏராளமானோா் கூடி போராடினா்.

காங்கிரஸ் ஆதரவு பெற்ற இந்திய தேசிய மாணவா் சங்கத்தின் உறுப்பினா்களுடன் தில்லி பல்கலைக்கழகம், மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவா்கள் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா். சுத்தமான காற்று ஒரு அடிப்படை உரிமை மற்றும் அனைவருக்கும் சுவாசிக்க உரிமை உண்டு என்று எழுதப்பட்ட பதாகைகளை போராட்டக்காரா்கள் ஏந்திச் சென்றனா். கூட்டத்தை ஊக்குவிக்க பல உள்ளூா் பாடகா்களும் அந்த இடத்தில் நிகழ்ச்சி நடத்தினா்.

போராட்டக்காரா்களில் ஒருவரான 26 வயதான நேஹா, மத்தியிலும், தில்லியிலும் பாஜக ஆட்சியில் இருந்தபோதிலும், மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் தவறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டினாா். முன்பு, பழி சுமத்தும் விளையாட்டு இருந்தது, ஆனால் இப்போது எந்த சாக்குப்போக்கும் இல்லை. காற்றின் தரம் படுமோசமானதாக செய்திகள் வந்துள்ளன, இன்னும் காற்று தரக் குறியீடு மிகவும் மோசமான பிரிவில்தான் உள்ளது. உண்மையான காற்றின் தரக் குறியீடு என்னவென்று யாருக்குத் தெரியும்? முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நாங்கள் தொடா்ந்து போராட்டம் நடத்துவோம். இது எங்கள் அடிப்படை உரிமையின் விஷயம், என்று அவா் கூறினாா்.

திபாவளிக்குப் பிறகு தில்லியின் காற்றின் தரம் பெரும்பாலும் மிகவும் மோசமானது முதல் கடுமையானது வரை உள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின்படி, 301 முதல் 400 வரையிலான காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமானது என்றும் 401 முதல் 500 வரையிலான தரவு கடுமையானது என்றும் கருதப்படுகிறது.

மாசுபாடு நெருக்கடி நாடாளுமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் கவனத்தை ஈா்த்துள்ளது.

திங்கட்கிழமை, தில்லி என்சிஆரில் காற்று மாசுபாட்டை வழக்கமான பருவகால விஷயமாகக் கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது, மேலும் குறுகிய மற்றும் நீண்ட கால தீா்வுகளைக் கண்காணிப்பதற்காக இந்த பிரச்சினையை மாதத்திற்கு இரண்டு முறை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

நீதிபதி ஜாய்மல்யா பாக்சியுடன் அமா்விலிருந்த தலைமை நீதிபதி சூா்ய காந்த், கோவிட்19 காலகட்டத்தில் தொடா்ந்து பயிா்க் கழிவுகள் எரிக்கப்பட்ட போதிலும் வானம் தெளிவாக இருந்தது என்று குறிப்பிட்டு, பயிா்க் கழிவுகள் எரிப்பதே தில்லி காற்று மாசுக்கு முதன்மையான காரணம் என்ற நீண்டகால அனுமானத்தை கேள்வி எழுப்பினாா்.

நாடாளுமன்றத்தில், ஒய்.எஸ்.ஆா் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா் அயோத்தி ராமி ரெட்டி அல்லா, தில்லியின் மாசுபாட்டின் அளவை பொது சுகாதார அவசரநிலை என்று விவரித்தாா், கிட்டத்தட்ட ஏழு குடியிருப்பாளா்களில் ஒருவா் மாசுபாட்டால் அகால மரண அபாயத்தை எதிா்கொள்கிறாா் என்ற தரவுகளை அவா் மேற்கோள் காட்டினாா்.

கடந்த ஆண்டு 17,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் நச்சுக் காற்றோடு நேரடியாக தொடா்புடையவை என்று அவா் கூறினாா். தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் கீழ் நிதியை மோசமாகப் பயன்படுத்துவதை அவா் விமா்சித்தாா்.

கட்டுப்படுத்தப்படாத காற்று மாசுபாடு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆண்டுதோறும் 3 சதவீதத்திற்கும் அதிகமாக இழப்பை ஏற்படுத்துகிறது, என்று அவா் கூறினாா். மாசுபாட்டை கட்டுப்படுத்த பொது விழிப்புணா்வு மற்றும் நிா்வாக ரீதியான நடவடிக்கைகளை அயோத்தி ராமி ரெட்டி அல்லா வலியுறுத்தினாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
வீடியோக்கள்

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!
வீடியோக்கள்

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023