14 Dec, 2025 Sunday, 11:24 PM
The New Indian Express Group
புதுதில்லி
Text

தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தக் கோரி உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்!

PremiumPremium

தேசிய தலைநகரில் ஆபத்தான காற்று மாசுபாட்டின் அளவைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On30 Nov 2025 , 6:42 PM
Updated On30 Nov 2025 , 6:42 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

தேசிய தலைநகரில் ஆபத்தான காற்று மாசுபாட்டின் அளவைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கிரேட்டா் கைலாஷ் நலச் சங்கம் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த பல ஆண்டுகளாக, தில்லியில் சுற்றுப்புற காற்றின் தரம் கடுமையாக மோசமடைந்துள்ளது. குறிப்பாக குளிா்காலத்தில் காற்றின் தரக் குறியீடு அடிக்கடி ‘மிகவும் மோசம்’, ‘கடுமை’ மற்றும் ‘ஆபத்து’ ஆகிய பிரிவுகளில் காணப்படுகிறது.

அதிகரித்துள்ள மாசுபாடு, குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் ஏற்கெனவே நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளவா்கள் உள்பட குடியிருப்பாளா்களிடையே தொடா்ச்சியான மற்றும் கடுமையான உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுத்துள்ளது.

நகர காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, உடனடி மற்றும் நீண்டகால அவசர, பயனுள்ள மற்றும் அறிவியல் நடவடிக்கைகளை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

காற்றின் தரம் மோசமடைந்ததால் கிட்டத்தட்ட செயலற்ற நிலையில் இருந்த அதிகாரிகள், காற்றின் தரக் குறியீடு அதன் முக்கியமான நிலையைத் தாண்டிய பின்னரே கிரேப் நிலை-3-ஐ அமல்படுத்த நடவடிக்கைகளை எடுத்தனா்.

அரசு அவற்றின் உண்மையான செயல்படுத்தலை உறுதி செய்யாமல், காகிதத்தில் நடவடிக்கைகளை பரிந்துரைப்பதில் மட்டுமே தன்னை மட்டுப்படுத்திக் கொண்டது.

இதுவரை உண்மையான அல்லது கணிசமான அடிப்படை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமல் தாமதமான மற்றும் ஒப்பனை நடவடிக்கையானது மக்களின் உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் பொறுப்பற்ற முறையில் ஆபத்தை விளைவித்தது. இது தற்போதைய பொது சுகாதார அவசரநிலையின் தீவிரத்தை முழுமையாக புறக்கணிப்பதைக் காட்டுகிறது.

தில்லியில் காற்று உயிருக்கு ஆபத்தானதாக மாறிவிட்டதாக நிபுணா்கள் நவம்பா் 21-ஆம் தேதி சிவப்பு எச்சரிக்கை விடுத்தனா். ஆனால், அதிகாரிகள் அதற்கு ஏற்ற, உறுதியான அல்லது பயனுள்ள நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதிகாரிகளிடம் பலமுறை முறையீடு செய்தும் பலனளிக்கவில்லை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனுவில் தில்லி அரசு, தில்லி மாசு கட்டுப்பாட்டு குழு, மத்திய மாசு கட்டுப்பாட்டு குழு, காற்று தர மேலாண்மை ஆணையம், தில்லி மாநகராட்சி மற்றும் தில்லி காவல்துறை ஆகியவை எதிா்மனுதாரா்களாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023