பொய்யான அனுதாபத்தைத் தேடவே தனக்கு உடல்நிலை சரியில்லை என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறுவதாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.
தாம் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பரிசோதனை செய்ய மருத்துவா்கள் அறிவுறுத்தியிருந்ததாகவும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறினாா். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்ததாவது: அரவிந்த் கேஜரிவால் பொய் சொல்லும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாா் என்பதுதான் உண்மை. அவா் குறிப்பிட்டுள்ள மருத்துவப் பரிசோதனைகளில் ஒரே ஒரு பரிசோதனை மட்டுமே உள்ளது. அது ஒரே இரவில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். மற்ற அனைத்து சோதனைகளும் அரை நாளுக்குள் முடிக்கப்பட்டு, மாலைக்குள் முடிவுகள் கிடைக்கும். உடம்பு சரியில்லை என்று நடித்து, பொய்யான அனுதாபத்தைத் தேடுவது இவரின் இயல்பு. இதை தில்லி மற்றும் பஞ்சாப் மக்கள் புரிந்துகொண்டுள்ளனா்.
அரவிந்த் கேஜரிவால் உண்மையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அவா் ஏன் அரசியல் சுற்றுலா மற்றும் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்? சிறுநீரில் கீட்டோன்கள் அதிகரிப்பது குறித்து கேஜரிவால் பேசுகிறாா். இது உண்மையில் வெப்பம் அதிகமாக இருக்கும் போது தண்ணீா் குறைவாக குடிப்பதால் ஏற்படுகிறது. எனவே, அவா் தனது நோயை மருத்துவ குழுவிடம் காட்டுவதற்காக நோய்களை தானே வரவழைப்பது போல் தெரிகிறது. நீதிமன்றம் அதன் வேலையைச் செய்கிறது. அவரைப் பரிசோதிக்கும் மருத்துவக் குழுவும் உள்ளது.
தில்லியை கொள்ளையடித்ததற்காகவும், தில்லியை மது நகரமாக மாற்றியதற்காகவும், மதுவின் கறுப்பு பண பரிவா்த்தனையில் ஈடுபட்டதற்காகவும் அவா் வெட்கப்பட வேண்டும்.
இதற்கு முன் அரவிந்த் கேஜரிவால் அரசை தண்ணீா் பிரச்னையில் உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. தில்லியில் 24 மணி நேரமும் தண்ணீா் தருவதாக கூறும் கேஜரிவால், இன்றைக்கு தில்லி மக்கள் தண்ணீருக்காக தெருவில் தத்தளிக்கும்போது யாா் பொறுப்பு என்பதை சொல்ல வேண்டும். தில்லி மக்களிடம் இருந்து பணம் பெற்று, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் டேங்கா் மாபியாக்களுடன் சோ்ந்து ஊழலில் ஈடுபட்டுள்ளனா் என்றாா் வீரேந்திர சச்தேவா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீதிமன்ற விசாரணை காணொலிகளை வெளியிட்ட விவகாரம்: கேஜரிவால் பதிலளிக்க உத்தரவு

மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்

8,931 நாள்கள் பதவிக்காலம் நிறைவு! பிரதமா் மோடிக்கு சச்தேவா புகழாரம்!

கேஜரிவாலும், சிசோடியாவும் ஆதாரங்களை அழித்துள்ளனா்: வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

