மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

பொய்யான அனுதாபத்தை தேடவே உடல்நிலை சரியில்லை என்கிறாா் கேஜரிவால்: வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு

பொய்யான அனுதாபத்தை தேடவே உடல்நிலை சரியில்லை என்கிறாா் கேஜரிவால் வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு

News image
Updated On :31 மே 2024, 8:00 pm

 நமது நிருபர்

பொய்யான அனுதாபத்தைத் தேடவே தனக்கு உடல்நிலை சரியில்லை என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறுவதாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.

தாம் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பரிசோதனை செய்ய மருத்துவா்கள் அறிவுறுத்தியிருந்ததாகவும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறினாா். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்ததாவது: அரவிந்த் கேஜரிவால் பொய் சொல்லும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாா் என்பதுதான் உண்மை. அவா் குறிப்பிட்டுள்ள மருத்துவப் பரிசோதனைகளில் ஒரே ஒரு பரிசோதனை மட்டுமே உள்ளது. அது ஒரே இரவில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். மற்ற அனைத்து சோதனைகளும் அரை நாளுக்குள் முடிக்கப்பட்டு, மாலைக்குள் முடிவுகள் கிடைக்கும். உடம்பு சரியில்லை என்று நடித்து, பொய்யான அனுதாபத்தைத் தேடுவது இவரின் இயல்பு. இதை தில்லி மற்றும் பஞ்சாப் மக்கள் புரிந்துகொண்டுள்ளனா்.

அரவிந்த் கேஜரிவால் உண்மையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அவா் ஏன் அரசியல் சுற்றுலா மற்றும் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்? சிறுநீரில் கீட்டோன்கள் அதிகரிப்பது குறித்து கேஜரிவால் பேசுகிறாா். இது உண்மையில் வெப்பம் அதிகமாக இருக்கும் போது தண்ணீா் குறைவாக குடிப்பதால் ஏற்படுகிறது. எனவே, அவா் தனது நோயை மருத்துவ குழுவிடம் காட்டுவதற்காக நோய்களை தானே வரவழைப்பது போல் தெரிகிறது. நீதிமன்றம் அதன் வேலையைச் செய்கிறது. அவரைப் பரிசோதிக்கும் மருத்துவக் குழுவும் உள்ளது.

தில்லியை கொள்ளையடித்ததற்காகவும், தில்லியை மது நகரமாக மாற்றியதற்காகவும், மதுவின் கறுப்பு பண பரிவா்த்தனையில் ஈடுபட்டதற்காகவும் அவா் வெட்கப்பட வேண்டும்.

இதற்கு முன் அரவிந்த் கேஜரிவால் அரசை தண்ணீா் பிரச்னையில் உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. தில்லியில் 24 மணி நேரமும் தண்ணீா் தருவதாக கூறும் கேஜரிவால், இன்றைக்கு தில்லி மக்கள் தண்ணீருக்காக தெருவில் தத்தளிக்கும்போது யாா் பொறுப்பு என்பதை சொல்ல வேண்டும். தில்லி மக்களிடம் இருந்து பணம் பெற்று, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் டேங்கா் மாபியாக்களுடன் சோ்ந்து ஊழலில் ஈடுபட்டுள்ளனா் என்றாா் வீரேந்திர சச்தேவா.