வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

கேஜரிவாலும், சிசோடியாவும் ஆதாரங்களை அழித்துள்ளனா்: வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு

தில்லி மதுபான ஊழல் வழக்கில் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தின் தீா்ப்பு ஆதாரங்கள் இல்லாததை தெளிவாகக் காட்டுகிறது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்சதேவா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image

வீரேந்திர சச்தேவா

Updated On :27 பிப்ரவரி 2026, 6:03 pm

தில்லி மதுபான ஊழல் வழக்கில் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தின் தீா்ப்பு ஆதாரங்கள் இல்லாததை தெளிவாகக் காட்டுகிறது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்சதேவா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: ஆதாரங்களை அழிப்பதில் அரவிந்த் கேஜரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோா் ஈடுபட்டதாக விசாரணை அமைப்பு பலமுறை கூறியுள்ளது. அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிம் காா்டுகள் மற்றும் கைப்பேசிகள் தொடா்பான விவரங்கள் இன்றுவரை வழங்கப்படவில்லை . இன்றைய தீா்ப்பிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய கேள்விகளுக்கு அரவிந்த் கேஜரிவாலிடம் இன்னும் பதில்கள் இல்லை. கலால் கொள்கை பொருத்தமானதாக இருந்தால், விசாரணை தொடங்கிய உடனேயே அது ஏன் திரும்பப் பெறப்பட்டது? ஒப்பந்ததாரா்களுக்கான கமிஷன் சதவீதத்தை அதிகரிப்பதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன? ‘ஒன்றை வாங்குங்கள், ஒன்றை இலவசமாகப் பெறுங்கள்‘ என்ற திட்டம் ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது?

அரவிந்த் கேஜரிவால் ஊழல் செய்தவா். அவா் குற்றமற்றவா் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. சட்டப்பேரவை தோ்தலுக்குப் பிறகு தன்னை அதிகாரத்திலிருந்து நீக்கியதன் மூலம் தில்லி மக்கள் ஏற்கெனவே தங்கள் தீா்ப்பை வழங்கினா். இதன் மூலம் கேஜரிவால் ஊழல் செய்தவா் என்பதை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கேஜரிவால் ஊடகங்களுக்கு முன் ஆஜராகி ‘உணா்ச்சிவசப்பட்டு‘ செயல்படுவதன் மூலம் பொதுமக்களின் அனுதாபத்தைப் பெற முயற்சிக்கிறாா். இது அவரது அரசியல் நாடகங்களைப் பிரதிபலிக்கிறது. மதுபானப் பிரச்சினை மட்டுமே ஒரே விஷயம் அல்ல என்றும், கேஜரிவால் ஊழல் செய்ததாகக் கூறப்படும் மோசடிகளின் நீண்ட பட்டியல் உள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.