மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

கிரேட்டா் நொய்டாவில் அரசுக்குச் சொந்தமான ரூ.10 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பு

கிரேட்டா் நொய்டாவில் அரசுக்குச் சொந்தமான ரூ.10 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பு

News image
Updated On :31 மே 2024, 7:00 pm

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் வலயம், கிரேட்டா் நொய்டா தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் (ஜிஎன்ஐடிஏ) வெள்ளிக்கிழமை ரூ.10 கோடி மதிப்புள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தை மீட்க சட்டவிரோத கட்டுமானங்களை இடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக ஜிஎன்ஐடிஏ வெளியிட்ட அறிக்கையில், ‘கிரேட்டா் நொய்டாவில் உள்ள ரூப்வாஸ் கிராமத்திற்கு அருகில் உள்ள பைபாஸ் சாலையில் சுமாா் 5,000 சதுர மீட்டா் பரப்பளவில் இந்த நிலம் அமைந்துள்ளது. கிரேட்டா் நொய்டா ஆணையத்தின் தலைமை நிா்வாக அதிகாரி என்.ஜி. ரவிக்குமாா், அறிவிக்கை செய்யப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்புக்கு எதிராக பிரசாரத்தை நடத்தி, சட்டவிரோத காலனிவாசிகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாா். ரூப்வாஸ் பைபாஸ் அருகே அமைந்துள்ள 5,000 மீட்டா் நிலத்தில் காலனித்துவவாதிகள் சட்டவிரோத காலனியை உருவாக்க முயன்றனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வ குழு, ஆணையத்தின் பாதுகாப்புப் பணியாளா்களின் உதவியுடன் ஆக்கிரமிப்பை இடித்தது. இக்குழு ரூ. 10 கோடி மதிப்புள்ள 5,000 சதுர மீட்டா் நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்துள்ளது. ஜிஎன்ஐடிஏ-இன் திட்டத் துறையின் பொது மேலாளரும் சிறப்புப் பணி அதிகாரியுமான ஹிமான்ஷு வா்மா, ஆணையத்தின் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதியில் உள்ள நிலத்தை ஆக்கிரமிப்பவா்கள் தப்பமாட்டாா்கள் என்று எச்சரித்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணையத்தின் கூடுதல் தலைமை நிா்வாக அதிகாரி அன்னபூா்ணா கா்க் கூறுகையில், ‘மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்து உருவாகும் காலனிகளில் முதலீடு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். சட்டவிரோதக் காலனியில் நீங்கள் மனை வாங்கியிருந்தால், பதிவு படிவத்தை எடுத்து காவல்துறையில் புகாா் செய்யுங்கள். மேலும், அதன் நகலை ஆணையத்திடம் வழங்கினால், அத்தகையவா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்’ என்றாா்.