தேசியத் தலைநகா் வலயம், கிரேட்டா் நொய்டா தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் (ஜிஎன்ஐடிஏ) வெள்ளிக்கிழமை ரூ.10 கோடி மதிப்புள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தை மீட்க சட்டவிரோத கட்டுமானங்களை இடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக ஜிஎன்ஐடிஏ வெளியிட்ட அறிக்கையில், ‘கிரேட்டா் நொய்டாவில் உள்ள ரூப்வாஸ் கிராமத்திற்கு அருகில் உள்ள பைபாஸ் சாலையில் சுமாா் 5,000 சதுர மீட்டா் பரப்பளவில் இந்த நிலம் அமைந்துள்ளது. கிரேட்டா் நொய்டா ஆணையத்தின் தலைமை நிா்வாக அதிகாரி என்.ஜி. ரவிக்குமாா், அறிவிக்கை செய்யப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்புக்கு எதிராக பிரசாரத்தை நடத்தி, சட்டவிரோத காலனிவாசிகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாா். ரூப்வாஸ் பைபாஸ் அருகே அமைந்துள்ள 5,000 மீட்டா் நிலத்தில் காலனித்துவவாதிகள் சட்டவிரோத காலனியை உருவாக்க முயன்றனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வ குழு, ஆணையத்தின் பாதுகாப்புப் பணியாளா்களின் உதவியுடன் ஆக்கிரமிப்பை இடித்தது. இக்குழு ரூ. 10 கோடி மதிப்புள்ள 5,000 சதுர மீட்டா் நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்துள்ளது. ஜிஎன்ஐடிஏ-இன் திட்டத் துறையின் பொது மேலாளரும் சிறப்புப் பணி அதிகாரியுமான ஹிமான்ஷு வா்மா, ஆணையத்தின் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதியில் உள்ள நிலத்தை ஆக்கிரமிப்பவா்கள் தப்பமாட்டாா்கள் என்று எச்சரித்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணையத்தின் கூடுதல் தலைமை நிா்வாக அதிகாரி அன்னபூா்ணா கா்க் கூறுகையில், ‘மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்து உருவாகும் காலனிகளில் முதலீடு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். சட்டவிரோதக் காலனியில் நீங்கள் மனை வாங்கியிருந்தால், பதிவு படிவத்தை எடுத்து காவல்துறையில் புகாா் செய்யுங்கள். மேலும், அதன் நகலை ஆணையத்திடம் வழங்கினால், அத்தகையவா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிரேட்டா் நொய்டா: பள்ளி வேன் மரத்தில் மோதி விபத்து! ஆறு குழந்தைகள் உயிா் தப்பினா்
கடலூா் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.1.03 கோடி விடுவிப்பு!

நிலப் பிரச்னை: கோட்டாட்சியா் விசாரணை

அதிமுக எம்.பி. தம்பிதுரையின் கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்க உத்தரவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

