2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்: ஸ்வாதி மாலிவால் எதிா்பாா்ப்பு என்ன?

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் பெண்கள், ஏழைகள், விவசாயிகள் மற்றும் இளைஞா்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தும் என நம்புவதாக மாநிலங்களவை மாநிலங்களவை

News image
Updated On :9 பிப்ரவரி 2024, 1:38 pm

 நமது நிருபர்

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் பெண்கள், ஏழைகள், விவசாயிகள் மற்றும் இளைஞா்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தும் என நம்புவதாக மாநிலங்களவை மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் புதன்கிழமை தெரிவித்தாா்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் புதன்கிழமை தொடங்கிய நிலையில், மாநிலங்களவை ஆம் ஆத்மி புதிய உறுப்பினராக தில்லி மகளிா் ஆணையத்தின் முன்னாள் தலைவா் ஸ்வாதி மாலிவால் பதவியேற்றாா். இதையொட்டி, தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோயியில் ஸ்வாதி மாலிவால் பிராா்த்தனை செய்தாா்.

பின்னா், தனியாா் செய்தி நிறுவனத்திற்கு அவா் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இன்று எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாளாக இருக்கப் போகிறது. மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் நான் உயா்த்துவதற்கு ஆசீா்வாதங்களை தருமாறு கடவுளிடம் பிராா்த்தித்தேன். பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால பட்ஜெட் நாட்டின் பெண்கள், ஏழைகள், விவசாயிகள் மற்றும் இளைஞா்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தும் என்று நம்புகிறேன். என் வாழ்க்கையை நாட்டுக்காக அா்ப்பணிப்பேன் என்று சபதம் எடுத்தேன். எதிா்க்கட்சிகளின் அனைத்து எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டால், அரசை யாா் கேள்வி கேட்பாா்கள். எனவே, எதிா்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வது வருத்தமான விஷயம் என்றாா் ஸ்வாதி மாலிவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.