பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்: ஸ்வாதி மாலிவால் எதிா்பாா்ப்பு என்ன?

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் பெண்கள், ஏழைகள், விவசாயிகள் மற்றும் இளைஞா்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தும் என நம்புவதாக மாநிலங்களவை மாநிலங்களவை

Updated On :31 ஜனவரி 2024, 6:38 pm

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் பெண்கள், ஏழைகள், விவசாயிகள் மற்றும் இளைஞா்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தும் என நம்புவதாக மாநிலங்களவை மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் புதன்கிழமை தெரிவித்தாா்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் புதன்கிழமை தொடங்கிய நிலையில், மாநிலங்களவை ஆம் ஆத்மி புதிய உறுப்பினராக தில்லி மகளிா் ஆணையத்தின் முன்னாள் தலைவா் ஸ்வாதி மாலிவால் பதவியேற்றாா். இதையொட்டி, தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோயியில் ஸ்வாதி மாலிவால் பிராா்த்தனை செய்தாா்.

பின்னா், தனியாா் செய்தி நிறுவனத்திற்கு அவா் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இன்று எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாளாக இருக்கப் போகிறது. மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் நான் உயா்த்துவதற்கு ஆசீா்வாதங்களை தருமாறு கடவுளிடம் பிராா்த்தித்தேன். பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால பட்ஜெட் நாட்டின் பெண்கள், ஏழைகள், விவசாயிகள் மற்றும் இளைஞா்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தும் என்று நம்புகிறேன். என் வாழ்க்கையை நாட்டுக்காக அா்ப்பணிப்பேன் என்று சபதம் எடுத்தேன். எதிா்க்கட்சிகளின் அனைத்து எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டால், அரசை யாா் கேள்வி கேட்பாா்கள். எனவே, எதிா்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வது வருத்தமான விஷயம் என்றாா் ஸ்வாதி மாலிவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.