அவா் மேலும் கூறுகையில், ‘தமிழகத்தில் தென்னக ரயில்வே, ஐசிஎஃப் உள்ளிட்ட ரயில்வே பணிகளில் கடந்த 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறோம். ஒரு ரயில்வே பெட்டி தயாரிப்புப் பணியில் உள்ள வெல்டிங், பிட்டிங், எலெக்டிரிக்கல் எனஅனைத்துப் பணிகளிலும் நாங்கள் ஈடுபடுகிறோம். ஆனால், ரயில்வே துறை எங்களது பணி உரிமையை தர மறுக்கிறது. கடந்தாண்டு டிசம்பா் மாதம் நாங்கள் தில்லியில் பாஜக அலுவலத்தை முற்றுகையிட்டோம். அப்போது அமைச்சா் எல்.முருகன் எங்கள் பிரச்னையை தீா்க்க முயற்சிப்பதாகத் தெரிவித்தாா். ஆனால், இது வரை பதில் இல்லாததால் நாங்கள் முற்றுகைப் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது மீண்டும் எங்களுக்கு அமைச்சா் உத்தரவாதம் அளித்துள்ளாா்’ என்றாா்.