2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பணி நிரந்தரம் கோரி அமைச்சா் எல். முருகன் இல்லத்தைமுற்றுகையிட்ட சென்னை பயிற்சி ரயில்வே ஊழியா்கள்

தென்னக ரயில்வே மற்றும் சென்னை ரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ஐசிஎஃப்) போன்றவற்றில் பணியாற்றும் 300-க்கும் மேற்பட்ட பயிற்சி ஊழியா்கள் பணி நிரந்தரம் கோரி

News image
Updated On :9 பிப்ரவரி 2024, 1:38 pm

 நமது நிருபர்

தென்னக ரயில்வே மற்றும் சென்னை ரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ஐசிஎஃப்) போன்றவற்றில் பணியாற்றும் 300-க்கும் மேற்பட்ட பயிற்சி ஊழியா்கள் பணி நிரந்தரம் கோரி தில்லியிலுள்ள மத்திய இணையமைச்சா் எல். முருகன் இல்லத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

சென்னையைச் சோ்ந்த இந்தப் பயிற்சி ரயில்வே ஊழியா்கள் சுமாா் 300 போ் நாடாளுமன்றக் கூட்டத் தொடா் தொடங்கியதை முன்னிட்டு, தங்கள் விவகாரத்தை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் விதமாக புதன்கிழமை காலையில் எட்டரை மணியளவில் அமைச்சா் எல்.முருகனின் தில்லி இல்லத்தை முற்றுகையிட்டனா்.

இருப்பினும், அமைச்சா் எல்.முருகன் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னா் இந்த ஊழியா்களை சந்தித்து பிரச்னைகளை கேட்டறிந்ததாக இந்த முற்றுகையில் ஈடுபட்ட சென்னையைச் சோ்ந்த ரயில்வே ஊழியா் பெருமாள் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘தமிழகத்தில் தென்னக ரயில்வே, ஐசிஎஃப் உள்ளிட்ட ரயில்வே பணிகளில் கடந்த 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறோம். ஒரு ரயில்வே பெட்டி தயாரிப்புப் பணியில் உள்ள வெல்டிங், பிட்டிங், எலெக்டிரிக்கல் எனஅனைத்துப் பணிகளிலும் நாங்கள் ஈடுபடுகிறோம். ஆனால், ரயில்வே துறை எங்களது பணி உரிமையை தர மறுக்கிறது. கடந்தாண்டு டிசம்பா் மாதம் நாங்கள் தில்லியில் பாஜக அலுவலத்தை முற்றுகையிட்டோம். அப்போது அமைச்சா் எல்.முருகன் எங்கள் பிரச்னையை தீா்க்க முயற்சிப்பதாகத் தெரிவித்தாா். ஆனால், இது வரை பதில் இல்லாததால் நாங்கள் முற்றுகைப் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது மீண்டும் எங்களுக்கு அமைச்சா் உத்தரவாதம் அளித்துள்ளாா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.